தமிழகத்தில் உள்ளநியாய விலை கடைகளில் ஜூன் மாத ரேஷன் பொருட்களை பெற டோக்கன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் 4 நான்கு நாட்களுக்கு வீடுகள் தோறும் டோக்கன்வழங்கப்பட இருக்கிறது. வரும் 5ம் தேதி முதல் டோக்கன் வரிசை முறைப்படி பொதுமக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் நியாய விலை கடைகளின் முன் கூட்டம் சேருவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.