Skip to main content

அமைச்சர் சீனியை ஓரம்கட்டிய விச்சு ஆதரவாளர்கள்! விச்சுவை ஓரம்கட்டிய சீனி ஆதரவாளர்கள்!! தீபாவளியால் வெடித்த உள்கட்சி கோஷ்டி பூசல்!!!

Published on 01/11/2018 | Edited on 01/11/2018

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியில் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் ஒரு கோஷ்டியும். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் மற்றெரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது.

      

dispute in dindukal admk!!

 

இந்த நிலையில்தான் பழனியில் உள்ள விஸ்வநாதன்  ஆதரவாளர்களான  ஜெ.பேரவை நகர துணை செயலாளர் ராஜாமுகமது மற்றும் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சதீஸ்குமார் தலைமையிலான ர.ர.க்கள் பலர் தங்கள் படங்களை போட்டு அதிமுகவின் கடைகோடி தொண்டர்கள் என்ற வரிகளுடன்  பழனி நகரில் உள்ள பல இடங்களில் தீபாவளி வாழ்த்துகள் கூறி பிளக்ஸ் பேனர்களை வைத்து இருக்கிறார்கள். அதில் சிட்டிங் அமைச்சர் சீனிவாசன் மற்றும் மாவட்ட செயலாளரான மருதராஜ் படங்களை போடாமலேயே பிளக்ஸ் பேனர்களை வைத்துத்திருப்பதை கண்டு சீனி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

 

dispute in dindukal admk!!

 

அதோடு இந்த விஷயம் மாவட்ட கழகத்திற்கு எட்டியதின் பேரில் திண்டுக்கல்லில் உள்ள மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர் சீனிவாசன் மகனான ராஜ்மோகன் மற்றும் மாவட்டசெயலார் மருதராஜ் மகனான பிரேம் ஆகியோர் கொண்ட திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி என்ற பெயரில் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என பிளக்ஸ் பேனர்களை அடித்து நகரில் பல இடங்களில் வைத்து இருக்கிறார்கள். அதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மச்சான் கண்ணன் படத்தை போடாமல் ஓரம் கட்டி விட்டனர். அதைக்கண்டு  நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். 

 

 

இதுபற்றி அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்ட போது...  முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அரசியலுக்கு கொண்டு வந்து  அம்மாவிடம் சொல்லி நத்தம் இடைத்தேர்தலில் சீட் வாங்கி கொடுத்து வெற்றிபெற வைத்தார் அதற்காக அண்ணன்  சீனிவாசனுக்கு நன்றி சொன்னார்.

 

admk

 

அதன் பின் அம்மாவுடன்  நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு  முப்பெரும்துறை அமைச்சராக வந்தவுடனே ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல் அண்ணன்  சீனிவாசனை விஸ்வநாதன்  கண்டு கொள்வதில்லை அப்படி இருந்தாலும் கூட அண்ணன்  சீனிவாசன் தானே சென்று கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டம்  உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிளும் கலந்து கொள்வார் அப்படி கலந்து கொண்டாலும்   நத்தம் விஸ்வநாதன்அவரது காரில் கூட ஏற மாட்டார் அந்த அளவுக்கு அண்ணன் சீனியை ஓரம்கட்டி வந்தனர்.

 

வேறு ஒரு அரசியல்வாதி என்றால் கட்சியே வேண்டாம் என ஓடி இருப்பார். ஆனால்  அண்ணன் சீனி அம்மாவுக்காகவும், கட்சிவளர்ச்சிக்கும் தொடர்ந்து இருந்து வந்ததால்தான் அம்மா திண்டுக்கல் தொகுதிக்கு சீட் கொடுத்து வெற்றிபெற வைத்து வனத்துறை அமைச்சர் பதவியையும் கொடுத்தார். அப்படி  இருந்தும் கூட அண்ணன் சீனி பலசை எல்லாம் நினைக்காமல் விஸ்வநாதனை அனைத்து கட்சி கூட்டத்துக்கு கூப்பிட்டு கொண்டுதான் வருகிறார். அவர்தான் சரிவர வராமல் இகோ பார்த்து கொண்டு தனக்கு என ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறார். அது போல் கோடை விழாவிற்கு முதல்வர் வந்தபோது முதல்வர் எடப்பாடியை வாழ்த்தி பேனர்கள் வைத்தார். அதில் அமைச்சர் சீனிவாசன் படத்தை போடவில்லை இந்த விஷயம் தெரிந்து எடப்பாடி சத்தம் போட்ட பிறகு பேப்பரில் ஒரு கால் பக்கம் விளம்பரம் கொடுத்து அமைச்சர் சீனிவாசன் படத்தை போட்டார். அப்படி  இருந்தும் கூட தொடர்ந்து அமைச்சர் சீனிவாசனுக்கு எதிராக  அரசியல் பண்ணவேண்டும் என்ற நோக்கத்தில்தான் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு அமைச்சர் சீனிவாசன் படத்தையும், பெயரையும் போட கூடாத அளவுக்கு அரசியல் பண்ணிவருகிறார்.

 

அதன் அடிப்படையில்தான் பழனியில் உள்ள விஸ்வநாதன் ஆதரவாளர்களர்கள் அமைச்சர் சீனிவாசன் படத்தை போடாமல் தீபாவளிக்கு வாழ்த்தி பேனர்கள் வைத்து இருக்கிறார்கள். இதை முதல்வர் எடப்பாடி வரை கொண்டு செல்ல மாவட்ட கழகம் தயார் ஆகி வருகிறது என்று கூறினார்கள்.

 

admk

 

இதுபற்றி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்ட போது.... மாவட்டத்தில் நடக்கும்  கட்சி கூட்டங்கள். கட்சியின் அலோசணை கூட்டங்களுக்கு கூட அண்ணன் விஸ்வநாதனுக்கு எந்த ஒரு தகவலும் சொல்வதில்லை அது போல் அரசு நிகழ்ச்சிகளுக்கும் தகவல் கொடுப்பதில்லை  எந்த ஒரு பதவியிலும் இல்லாத மாவட்ட செயலாளர் மருதராஜ்சை அரசு நிகழச்சியில் போடுகிறார்கள் ஆனால்  எங்க முன்னாள்  முப்பெரும் துறை அமைச்சர் அண்ணன்  விஸ்வநாதனை கூப்பிடுவது இல்லை. கடந்த வாரம் கூட பழனி மருதாநதி அணை தண்ணீரை திறந்து வைக்க அமைச்சர் சீனிவாசன் வந்தார். அந்த விளம்பர்திலும், பேனர்களிலும்  அண்ணன் விஸ்வநாதன் படம் போடாமல் புறக்கணித்து விட்டனர். அதுபோல்தான் மாவட்டத்தில் நடக்க கூடிய பல நிகழ்ச்சிகளில்  சீனிவாசன் ஆதரவாளர்கள் எங்க முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் விஸ்வநாதன் படத்தையும் பெயரையும் போடுவதில்லை அதுதான் நாங்களும் சீனிவாசன் படத்தை போடவில்லை. இதுபற்றி முதல்வர் எடப்பாடியிடம் அவர்கள் புகார் கூறினால் நாங்களும்  அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள்.

 

    

இப்படி மாவட்டத்தில் ஆளும் கட்சியின் உள்கட்சிகுள்ளேயே முன்னாள் இன்னாள் அமைச்சர்களின் கோஷ்டி பூசல் உச்சகட்டத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்களாக இன்னாள் அமைச்சர் சீனிவாசனையும். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனையும் முதல்வர் எடப்பாடி நியமித்து இருக்கிறார். இப்படி உள்கட்சியில் நடக்கும் கோஷ்டி பூசல்  இடைத்தேர்தலிலும் விஸ்வரூபம் எடுக்க போகிறது என்ற பேச்சு இப்பொழுதே ர.ர.க்கள் மட்டுமல்ல எதிர்கட்சிகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.