2,700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Disposal of 2,700 liters of fake liquor

வேலூர் மாவட்டம் குடியாத்ததில் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,700 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அவ்வப்போது சோதனையில் ஈடுபடும் போலீசார் கைப்பற்றப்படும் கள்ளச்சாராயம் மற்றும் அதற்கான ஊறல்களை அளித்து கீழே விட்டு அழித்து வருகின்றனர். இந்தநிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,700 லிட்டர் கள்ளச்சாராய ஊறலைக் கைப்பற்றிய போலீசார் அதை தரையில் கொட்டி அழித்தனர்.

kudiyatham
இதையும் படியுங்கள்
Subscribe