Advertisment

"நீக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீண்டும் செயல்படலாம்"- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு! 

publive-image

Advertisment

அ.தி.மு.க.வில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று (23/07/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுக்கோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சிச் செயலாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தொகுதிக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

statement Leader admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe