Skip to main content

போலீஸ் எஸ்ஐ பணியிடைநீக்கம்; அபராதம் வசூலில் மோசடி புகார்!!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

சேலத்தில், போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் ரசீதில் பதிவு செய்யாமல் மோசடி செய்ததாக காவல்துறை உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை (டிச. 12) பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.


சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களுக்கு, அந்த இடத்திலேயே அபராதம் (ஸ்பாட் பைன்) விதிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இலகுரக, கனரக வாகன ஓட்டிகளைவிட ஹெல்மெட் அணியாமல், ஓட்டுநர் உரிமமின்றி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளே பெரும்பாலும் போக்குவரத்துக் காவலர்களிடம் அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர்.

Dismissal of police SI; Fraud Complaint for Fines SALEM DISTRICT POLICE


அபராதம் வசூலிக்கும் தொகைக்கு உரிய ரசீதை அந்த இடத்திலேயே காவலர்கள், பிஓஎஸ் உபகரணத்தில் பதிவிறக்கம் செய்து கொடுத்து விடுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, சேலம் மாநகர காவல்துறையில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் (எஸ்ஐ), அபராதம் வசூல் தொகையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.


அண்மையில், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவரை எஸ்ஐ கோவிந்தராஜ் மடக்கிப் பிடித்தார். அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அதனால் வாகன ஓட்டிக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. என்றாலும் அபராதத் தொகையை செலுத்திவிட்ட அந்த வாகன ஓட்டி, அதற்கான ரசீது தொகையை கொடுக்கும்படி கேட்டுள்ளார். 


பிஓஎஸ் உபகரணத்தில் தகவல்களை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து ரசீது தாளை அந்த வாகன ஓட்டியிடம் வழங்கினார். ஆனால், அந்த ரசீதில் அபராதத் தொகை பெற்றுக்கொண்டதற்கான விவரங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேட்டதால் அவர்கள் இருவருக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தக் காட்சிகளை அந்த வாகன ஓட்டியுடன் வந்த ஒருவர், கைபேசியில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த காணொலிக் காட்சி, காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அபராதக் கட்டண விவரங்கள், உரிய ரசீதில் பதிவு செய்யப்படவில்லை என்பது ஊர்ஜிதமானது. இதையடுத்து, எஸ்ஐ கோவிந்தராஜை பணியிடைநீக்கம் செய்து, மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் வியாழக்கிழமை (டிச.12) உத்தரவிட்டார். மேலும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் கூடுதலாக அபராதம் வசூலிக்கக்கூடாது என்றும், வசூலிக்கப்படும் தொகைக்கு உரிய ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துப் பிரிவு காவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.