Skip to main content

போலி சான்றிதழ் கொடுத்து அரசு வேலை பெற்றவர் டிஸ்மிஸ்...

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

Dismissal of a person who got a government job by giving fake certificate ...

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ளது மாடாம்பூண்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் திருக்கோவிலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் பணியில் இருந்தபோதே கடந்த 2007ஆம் ஆண்டு இறந்து போய் உள்ளார். அதையடுத்து அவரது மகன் ஏழுமலை தனது தந்தையின் இறப்பையடுத்து தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி கருணை அடிப்படையில் தமிழுக்கு அரசுப் பணி வழங்குமாறு ஏழுமலை அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். 

 

அவரது விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட அரசு கருணை அடிப்படையில் ஏழுமலைக்கு அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப திருக்கோவிலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பணி வழங்கப்பட்டு ஏழுமலை பணியில் சேர்ந்து அலுவலகப் பணிகளை செய்து வந்துள்ளார். அதன்பிறகு சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணி மாறுதல் பெற்று சென்று பணி செய்து வருகிறார். 


இந்த நிலையில் ஏழுமலையின் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ கல்வி சான்றிதழ்கள் உண்மை தன்மை குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் ஏழுமலையின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரியவந்துள்ளது. இதுகுறித்து சங்கராபுரம் உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஏழுமலையை தேடி வருகின்றனர். இதற்கிடையே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஏழுமலையை நிரந்தர பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை சென்னை முதன்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கருணை அடிப்படையில் கிடைத்த வேலையை போலி சான்றிதழ் மூலம் ஏமாற்றியதற்காக தற்போது பணியை இழந்ததோடு கிரிமினல் குற்றத்தின் அடிப்படையில் வழக்கில் சிக்கி தலைமறைவாகி உள்ளார் ஏழுமலை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்க விண்ணப்பம்; அதிரடி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
 The High Court Judgment on Application for issuance of Caste, Non-Religion Certificate

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்று திருப்பத்தூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால், அதே வேளையில், இது போன்ற சான்றிதழ்களை வழங்கினால் சில பிரச்சனைகளும் ஏற்படும். 

குறிப்பாக சொத்து, வாரிசுரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், அரசு உத்தரவுப்படி, கல்வி நிறுவனங்களில் உள்ள விண்ணப்பங்களில் சாதி, மதம் குறித்த விவரம் கோரும் இடத்தை பூர்த்தி செய்யாமல், அப்படியே விட்டு விட உரிமை உள்ளது. அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

மேலும், சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலையில், சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது” எனக் கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Mikjam storm damage Public Health Department Important Notice

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு தவறவிட்ட மற்றும் சேதமடைந்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை https://crstn.org என்ற இணையதளம் வாயிலாகக் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனப் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கடந்த ஜனவரி 2018 முதல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.