Skip to main content

காவல்துறையை அவமானப்படுத்தியதால் மா.செ. சஸ்பெண்ட் - திருமாவளவன் எம்.பி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Dismiss vck district secretary from party for under-reporting of police

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதி அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் பக்கத்தில் அதே அரசு புறம்போக்கு இடத்தில் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னகண்ணன் என்பவரின் கடை உள்ளது. அந்தக் கடையை விடுதலைச் சிறுத்தை கட்சியினரால்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக சின்னகண்ணன் என்பவர் அவர்கள் மீது ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதே போல சின்னகண்ணன் மீது தங்களை தரக்குறைவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர். இரு தரப்பினர்களிடமும்  கடந்த 2ம் தேதி ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விடுதலைச் சிறுத்தை கட்சி திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்பவர் விசாரணையின் போது நகர காவல் நிலைய எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி என்ற அதிகாரியை பார்த்து நீ எஸ்.சி (தாழ்த்தப்பட்டவர்) தானே என்றும் மற்றொரு அதிகாரியான காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் என்பவரை ஒருமையில் மிரட்டல் தொனியில் விசாரணையின் போது பேசும் வீடியோ 5 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தன. இந்நிலையில் இன்று வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணா தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஆரணி நகர் முழுவதும் குவிக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

ஜனவரி 27 ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து  நேற்று விசிக கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி, நகர காவல் நிலையம் வழியாக ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் பாஸ்கரன் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த நகர காவல் நிலைய ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும்  துணை ஆய்வாளரை கிருஷ்ணமூர்த்தியை அவன், இவன் என்று கூறி தரக்குறைவாகப் பேசியபடி காவல் நிலையம் முன்பு கோஷங்கள் எழுப்பி மிரட்டல் விடுத்தனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த அப்பகுதியிலுள்ள போலீசார் அமைதி காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வாட்ஸாப்பில் நெட்டிசன்கள் பரப்பிய அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இதையடுத்து, ஆரணி போலீசார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் மற்றும் விசிகவினர் 50 பேர் மீது ஒன்பது பிரிவின் கீழ் ஜாமீனில் வெளிவராத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஸ்கர் தலைமறைவாகியுள்ளார். ஆரணி நகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவல்துறையினரை அவமதிக்கும் வகையில் மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக, வி.சி.க திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்ற பகலவன் 3 மாத காலத்துக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு, இதுபற்றி முழுமையாக விசாரிக்க மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக்குழு நியமிக்கப்படும் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.