சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய (10.07.2020) நிலவரப்படி, 74,969 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் என பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Advertisment

எனவே, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கிருமி நாசினி தெளிக்கவேண்டும் என அரசு அறிவுறுத்தியது. அதன்படி சென்னை, தலைமைச் செயலகம் இரண்டு நாட்கள் மூடப்பட்டு இன்று (11.07.2020) கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.