Skip to main content

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018


தமிழக சட்டப்பேரவை 3 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் கூடவுள்ள நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கவுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. அன்று நடப்பாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து அன்று மாலையே பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்ட பின், பட்ஜெட் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடவுள்ளது.

மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். எதிர்கட்சியின் உரைகளுக்கு பதிலளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை நிகழ்த்துகிறார்.

சார்ந்த செய்திகள்