Skip to main content

இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்:சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டியதாக கூறி, சாலையை அகலப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நெடுஞ்சாலை அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தின் வழியே செல்கிறது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீழப்பழுவூர் கிராம மக்களிடம் சாலையின் இரு புறங்களிலும் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

 Discrimination in compensation: The villagers struggle to stop road work!


அப்போது ஒரு சதுர மீட்டருக்கு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து அனைவரிடமும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் நிலத்தை ஒப்படைத்தவர்களில் பலருக்கு அடுத்த சில மாதங்களில் அதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு சான்றிதழ் குறைபாடு காரணமாக பணம் வழங்குவது தாமதப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீதமுள்ளவர்களும் சான்றிதழ்களை ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களுக்கும் தற்போது இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பு நிலத்தை ஒப்படைத்தவர்களிடம் கொடுத்த பணத்தைவிட தற்போது நிலத்தை ஒப்படைத்தவர்களுக்கு ஒரு சதுர மீட்டருக்கு அதிகப்படியான பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முன்பு நிலத்தை ஒப்படைத்தவர்கள் எங்களுக்கும் அதேதொகை தானே நீங்கள் வழங்க வேண்டும். தற்போது சான்றிதழ்களை வழங்கியவர்களுக்கு மட்டும் ஒரு சதுர மீட்டருக்கு ஏன் அதிகப்படியான இழப்பீட்டு தொகையை வழங்கி உள்ளர்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட தொடங்கினர். இதனையடுத்து அதிகாரிகள் கூடிய விரைவில் இதை சரி செய்து தருகிறோம். அதுவரை நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி தொடங்காது என கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் பல மாதங்கள் கடந்தும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் பல்வேறு மனுக்களை தொடர்ந்து அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி கீழப்பழுவூர் கிராமத்தில் 3 இடங்களில் தொடங்கப்பட்டது.

பிரச்சினைக்கு தீர்வு வழங்காமலேயே வேலையை தொடங்கியதால், ஆத்திரமடைந்த அந்த பாதிக்கப்பட்ட மக்கள் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்த 3 இடங்களுக்கும் சென்று வேலை நடை பெறுவதை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டங்களுக்கு பின்பும் எந்த அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த மக்கள் அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த தகரங்களை கழட்டி வீசி, பள்ளம் தோண்டுவதற்கான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி நின்று இதற்கு தீர்வு கிடைக்கும் வரை வேலைகளை தொடங்கக்கூடாது என கூறிவிட்டுகிராமமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. புதிய மாவட்ட ஆட்சியர்.டிஜி.வினய் அவர்கள் இதற்க்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் நிலம் பரிகொடுத்த மக்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .