Skip to main content

கடலூர்: பெண் ஊராட்சி தலைவர்களைச் செயல்படவிடாமல் தடுப்பதாக புகார்!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
cuddalore

 

கடலூர் மாவட்டத்தில் பெண் ஊராட்சி தலைவர்களை செயல்பட விடாமல் தடுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

 

ஏற்கனவே  கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியம் பெரியகாப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவரான தமிழ்ச்செல்வி அரங்கநாதன் என்பவர் தன்னை சில தனிநபர்கள் செயல்பட விடாமல் தடுப்பதாக ஆடியோ பேசி அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியிருந்தார். 

 

பெண் ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் தன்னை செயல்பட விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீ குளிப்பேன் என மாவட்ட கலெக்டருக்கு பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

அந்த ஆடியோவில், "நான் பெரியகாப்பாங்குளம் பெண் ஊராட்சி தலைவர் என்பதால் ஊராட்சியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பள்ளிகளுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும்பணியை கட்சிக்காரர்கள்தான் செய்ய வேண்டும், உங்களுக்கு கையெழுத்து போடும் பணி மட்டுமே எனவும் மீறினால் ஏற்கனவே பி.கே.வீரட்டிகுப்பம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் குடிமராமத்து பணியை செய்ததற்கு ஊமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டுத்தனமாக மண் வெட்டியதாக வழக்கு பதிவு செய்தது போலவே காவல் துறைமூலம் வழக்கு பதிவு செய்வோம் என சிலர் விரட்டுகிறார்கள். இதனை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டதற்கும்  எந்த பலனும், நடவடிக்கையும் இல்லை.

 

ஆதலால் கனம் பொருந்திய தாங்கள் இதுகுறித்து முறையான விசாரணை செய்து ஊராட்சியின் நிர்வாகத்தில் தனிநபர்கள் கட்சி பெயரை சொல்லி இடையூறு செய்யாவண்ணம் பெண் ஊராட்சி தலைவர்களை புரட்சி தலைவி அம்மாவின் வழியில் வந்த ஆட்சியை மதிக்கும் வகையில் பெண் ஊராட்சி தலைவர்கள் நிர்வாகத்தில் கணவர்கள் தலையீடு இல்லாமல் செயல்பட உத்தரவிட்டது போல,  கட்சி பெயரை சொல்லி தனிநபர்கள் இடையூறு ஊராட்சி நிர்வாகத்தில்  இல்லாமலிருக்க தக்க நடவடிக்கை எடுத்து உதவி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் தீக்குளிப்பேன்'

என அழுது கொண்டே வாட்ஸப்பில் பேசி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

 

இந்நிலையில் பெரியகாப்பான் குளம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி அரங்கநாதன்,  மற்றும் மணக்கொல்லை ஊராட்சி தலைவர் அமிர்தவல்லி வீராசாமி,  பழையபட்டணம் ஊராட்சி தலைவர் மும்தாஜ் பேகம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூயிரிடம் மனு அளித்துள்ளனர்.

 

அந்த மனுவில், "எங்களது ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளில் அரசியல் காரணங்களுக்காக சில தனிநபர்கள் தலையிட்டு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரியகாப்பான்குளம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சின்னகாப்பான்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பி.கே.வீரட்டிக்குப்பம் தொடக்கப்பள்ளி களில் ரூபாய் 14.42 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர் அனுமதி அளித்தும் பணியை தொடங்க முடியவில்லை. பல்வேறு காரணங்களை கூறி சிலர் பணியை தடுத்து வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளனர்.   

 

பெண் ஊராட்சி தலைவர்கள் செயல்பாடுகளில் கணவர்கள் தலையிடக்கூடாது என உத்தரவு இருக்கும்போது கட்சியின் பெயராலும், அதிகார தோரணையிலும் மிரட்டுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. உடனடியாக அந்த ஊராட்சி தலைவரை விசாரித்து அவரை மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்லர்களும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.