style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளின் தேசிய மாணவர் படையின் மாணவ மாணவியர்களின் மற்றும் அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி, சென்னை மாநில கல்லூரியில் நேற்று துவங்கியது. அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். தீயணைப்புத்துறை மற்றும் மீட்புபணித் துறை சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும், பல்வேறு அரங்குகளில் பேரிடர் மீட்பு உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.