Advertisment

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.1,000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை, கிண்டி பகுதியின் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.