Skip to main content

இயக்குநர் கே.பாக்யராஜ் கஞ்சா பழக்கத்திலிருந்து மீண்ட கதை!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

 

தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று இன்றளவும் புகழப்படுபவர் இயக்குநர் கே.பாக்யராஜ். இவர், சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிட்டார் என்பது பலருக்கும் தெரியும்.  ஆனால், இவர் கஞ்சாவுக்கு  அடிமையாக இருந்து அதிலிருந்து மீண்ட கதை தெரியுமா?

அதை அவரே ‘கோலா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறினார்.

 

k

 

இப்படத்தின் விழாவின் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம்,  கஞ்சா அடிக்குறவங்கள நடுரோட்டில் வச்சு வெட்டணும் என்று பேசினார்.  இதை அடுத்து பேசிய பாக்யராஜ்,  ’’நானே நிறைய கஞ்சா அடிச்சிருக்கேன்.   கோயம்புத்தூரில் குட்டப்பார்க்கில் உட்கார்ந்துகொண்டு அடிச்சிருக்கேன்.  அந்த பழக்கம் எனக்கு எப்படி வந்தது என்றால்....என்னிடம் உதவியாளராக இருந்தவர் விஸ்வம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு  அவரை  நான் என்னுடைய நாடகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தேன்.  அந்த சமயத்துல அவர் ராமநாதபுரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அடிக்கடி  கேரம் போர்டு ஆட வருவார்.   கேரம்போர்டு ஆடும்போது சிகரெட் பிடிப்பார்.  அந்த சிகரெட்டின் முனை ஒரு மாதிரியாக இருப்பதை கண்டுபிடித்து,   ’இது என்ன?’என்று  கேட்டேன்.   சிகரெட்டின் உள்ளே கஞ்சா துகள் வைத்திருப்பதை சொன்னார்.  கஞ்சா துகளை சிகரெட் உள்ளே திணித்து வைப்பதற்காகவே அவர் ஒரு உதவியாளரை வைத்திருந்தார்.  

 

என்னிடம் ஒரு சிகரெட்டை நீட்டினார்.  ‘நான் சிகரெட்  குடிப்பேன்.  ஆனால், இந்த சிகரெட்டை குடிப்பதற்கு பயமாக இருக்கிறது’ என்றேன்.  ’அந்த பயத்தை போக்குவதற்குத்தான் இது’ என்று கொடுத்தார்.  சரின்னு வாங்கி குடிச்சேன்.  அது ஒரு மாதிரியா நல்லாத்தான் இருந்துச்சு.   அதன் பின்னர் கேரம் போர்டு ஆடும்போதெல்லாம் குடிப்போம்.   சில நேரங்களில் அது நல்லாவே வேலை செய்யும்.  நமக்கு இல்லாத ஐடியாக்கள் எல்லாம் அவற்றால் வரும்.   

 

ஒருநாள் எல்லோரும் உட்கார்ந்து கஞ்சா அடித்துக்கொண்டிருக்கும்போது ஒருவன் சிரித்தான்.  ஏன் சிரிக்கிறோம் என்றே தெரியாமல்  சிரிப்பான்.   ஒருத்தன் சிரித்தால் அடுத்தடுத்து எல்லோரும் சிரிப்போம்.   அப்போதுதான் சிந்தேன்.   நாம் போக நினைத்த பாதையை விட்டுவிட்டு தடம்மாறிப்போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.  அத்தோடு புறப்பட்டு சென்னை வந்துவிட்டேன்.   சினிமாவில்  எனக்கு உதவியாளராக விஸ்வம் வந்தார்.  அப்போது அவர் கையில் சிகரெட் இருப்பதைபார்த்து,  இத நான் விட்டதால்தான் நல்லா இருக்கிறேன்.  நீயும் விட்டுவிடு என்றேன்.   

 

களவும் கற்றுமற என்பது மாதிரி சில விசயங்களை கற்றுக்கொண்டு விட்டுவிடவேண்டும். சிகரெட்டையும் நிறுத்தி  15 வருடங்களுக்க்கு மேல் ஆகிவிட்டது.’’என்று தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.    

Next Story

“படம் பிடிக்கலைன்னா காலனியால் கூட அடிங்க” - இயக்குநர் பகிர் 

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
hotspot director vignesh karthick viral statement

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட சங்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிடப்பட்டது. இதில் பேரரசு, மந்திர மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை காலனியால் கூட அடிங்க என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  “படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இன்னும் தியேட்டரில் நாங்க எதிர்பார்க்கிற கூட்டம் வரவில்லை. ஒரு வேளை ட்ரைலர் பார்த்து சில பேர் வராம இருக்காங்களா என தெரியவில்லை. மலையாள படங்களுக்கு அவ்ளோ சப்போர்ட் பன்றீங்க.

நீங்க கண்டிப்பா தியேட்டருக்கு வந்து பாத்தீங்கனா படம் பிடிக்கும். அப்படி பிடிக்கலைனா காலனியால் கூட என்னை அடிங்க. இதை சும்மா பேச்சுக்கு நான் சொல்லவில்லை. நீங்க படம் பாத்தீங்கனா, நல்லாருக்கு, ரொம்ப நல்லாருக்கு இல்ல சூப்பரா இருக்கு இப்படி தான் சொல்வீங்க. பிடிக்கல, அல்லது ஏண்டா வந்தோம்னு ஃபீல் பண்ண மாட்டீங்க. அப்படி ஃபீல் பண்ணீங்கன்னா முன்னாடி சொன்னது போல காலனியால் கூட அடிங்க. நீங்க தியேட்டருக்கு வந்து பார்த்தால் தான் படம் இன்னும் அதிகளவு மக்களை சென்றடையும். 

கருத்து சொல்கிற படமென்பதால் போர் அடிக்கிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. பயங்கர ஜாலியா தான் சொல்லியிருக்கிறோம். இது தியேட்டருக்கான படம். ஓடிடியில் பார்க்கும் போது அந்த அனுபவம் இருக்காது. ஆனால் தியேட்டரில் மக்களுடன் பார்ப்பது வேறுமாதியான அனுபவம். அதனால் முடிஞ்ச அளவிற்கு தியேட்டருக்கு வந்து பாருங்க. நீங்க சப்போர்ட் பண்ணி அதிகளவு பேசப்பட்டால் தான், இதுக்கப்புறம் பண்ணும் படமும் வித்தியாசமா பண்ணனும்னு தோணும். இல்லைனா வழக்கம் போல் படம் தான் பண்ண தோணும். அது உங்க கையில் தான் இருக்கிறது” என்றார்.