ADVERTISEMENT

டைனோசர் முட்டைகள் அல்ல...  அருங்காட்சியக காப்பாட்சியார் விளக்கம்! 

09:42 PM Oct 24, 2020 | kalaimohan

ADVERTISEMENT

பெரம்பலூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள முட்டை வடிவிலான உருண்டைகள் டைனோசர் முட்டைகளாக இருக்கக் கூடுமோ என்ற கேள்வி எழுந்த நிலையில் அவை டைனோசர் முட்டைகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் பல்வேறு விவசாய பணிக்காக அவ்வப்போது பூமியைத் தோண்டும் பொழுது வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு போன்ற முட்டை வடிவிலான பாறைகள் கிடைக்கப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அண்மையில் பெரம்பலூர் குன்னம் பகுதியில் ஏரியை ஆழப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பொழுது முட்டை வடிவிலான உருண்டைகள் நூற்றுக்கணக்கில் கண்டறியப்பட்டது. கண்டெடுக்கப்பட்டவை டைனோசரின் முட்டைகளாக இருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையில் அரியலூர் அரசு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் தியாகராஜன், பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் இதுபோன்ற முட்டை வடிவிலான உருண்டைகள் அவ்வப்போது கிடைப்பது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற பாறைகள் கிடைக்கப்பெற்றபோது இது சுண்ணாம்புக்கல் என்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அதே வடிவிலான பாறைகள் ஏரியில் கிடைத்துள்ளதால் ஆய்விற்கு பிறகே இந்த பாறைகள் அதே சுண்ணாம்பு பாறைகளா அல்லது டைனோசர் முட்டைகளா என்பது தெரியவரும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியார் சிவக்குமார் கூறுகையில், கண்டுபிடிக்கவப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல, ஆனால் இந்த முட்டை போன்ற உருண்டைகள் கடல்வாழ் உயிரினங்களின் படிமபாறைகள். கடல் வாழ் உயிரினங்களின் மீது அம்மோனைட் எனும் பொருள் படித்ததால் ராட்சத உருண்டைகளாகியுள்ளது என விளக்கமளித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT