Skip to main content

யானை வழித்தடங்களை மக்கள் ஆக்கிரமித்ததால்தான் யானை வருகிறது-திண்டுக்கல் சீனிவாசன் தகவல்!!

Published on 03/02/2019 | Edited on 03/02/2019
seenivasan

 

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை அதிமுகவினர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன்,

 

சின்னத்தம்பி யானை காட்டுக்குள் இருப்பதை சாப்பிடுவதை விட்டுவிட்டு நாட்டுக்குள் இருக்கின்ற தீவனங்களை சாப்பிட்டு பழகிவிட்டது அதனால் உள்ளே வருகிறது. ஆனால் இந்த யானைக்கு பயிற்சி கொடுப்பதற்கு, அதனுடைய அசைவுகள் பற்றி எல்லாம் தெரிந்திருக்கக்கூடிய அறிவியலாளர்கள், ஐஎஃப்எஸ் படித்தவர்கள் அந்த யானையை கும்கி யானையை போய் சேர்ந்து விட்டால்  யானை கூட்டங்களோடு ஒன்றாக இருக்கும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கருத்துகளைப் பரிசீலித்துவருகிறோம். இது ஒரு  நல்ல முடிவுதான். அதை வேண்டாம் என்று மக்கள் கருதினால்  அதற்கான மறுபரிசீலனை சிந்தனையும் செய்யப்படும்.

 

முதலில் அந்த யானை பிடிப்பதற்கான வேலைகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைக்கு எந்த விதமான ஆபத்தும் வரக்கூடாது, அந்த யானையினால் மக்களுக்கும் ஆபத்து வரக்கூடாது அதுதான் வனத்துறையின் கருத்து. அதுதான் தற்போது செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. யானைக்கு மதம் பிடித்தால் என்ன செய்வது என்ற முன்யோசனையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும்  மக்களுக்கு ஆபத்து இல்லை. எப்படியாவது காட்டுக்குள் அழைத்துச் செல்ல யோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது. 

 

தமிழ்நாட்டில் 101 யானை வழித்தடங்கள் உள்ளது. தற்போது அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த இடங்களுக்கு யானைகள் வருகிறது. இது மக்களாகவே பார்த்து திருந்த வேண்டும் அதற்குரிய வழிகளையும் அரசு எடுக்கும் எனக் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.