Skip to main content

விவசாயிகளின் விலை பொருட்களை வைக்க குளிர் சாதன கிடங்கு அமைக்க வேண்டும்- மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி கோரிக்கை!

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

விவசாயிகளின் விலை பொருட்களை வைக்க குளிர் சாதன கிடங்கு அமைக்க வேண்டும்- மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி கோரிக்கை!கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான வேலுச்சாமி தமிழகத்திலேயே அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். அதற்காக  கழகத் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ பெரியசாமிக்கும் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி கிழக்கு மாவட்ட செயலாளரும்  பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ பி செந்தில் குமாருக்கும், நத்தம் சட்டமன்ற உறுப்பினரான  ஆண்டி அம்பலத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

 


அதைத் தொடர்ந்து சென்னை சென்ற எம்பி வேலுச்சாமி தலைவர் ஸ்டாலின் வேண்டும் ஆசி பெற்றார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினும் வேலுச்சாமிக்கு வாழ்த்துக் கூறினார். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று பாராளுமன்ற உறுப்பினரான வேலுச்சாமி பதவியேற்றுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் டெல்லியில் உள்ள ரயில்வே உயர் அதிகாரியையும்  சென்னையில் உள்ள ரயில்வே அதிகாரியையும் சந்தித்து மதுரையில் இருந்து சென்னைக்கும், சென்னையில்இருந்து மதுரைக்கும் செல்லும் தேஷாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை திண்டுக்கலில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தார்  

 

 

DINDUGUL DISTRICT LOK SABHA CONSTITUENCY VELUCHAMY MEET MINISTER NARENDRA SINGH DHOMAR

 


     

பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு டெல்லி சென்ற எம்பி வேலுச்சாமி அங்குள்ள விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை  மத்திய அமைச்சரான நரேந்திர சிங் தோமரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எம்.பி.வேலுச்சாமி கூறியிருப்பதாவது,  எனது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் ஆத்தூர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி நிலக்கோட்டை  நத்தம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும்  விவசாயம் நிறைந்த பகுதிகளாக இருந்து வருகிறது. 

 

அதுலையும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் காய்கறியும். நிலக்கோட்டை தொகுதியில் பூக்களும் நத்தம் தொகுதியில் மாங்காய் மற்றும் புளி அதிகமாக விளைகிறது. அப்படியிருந்தும் கூட இதுவரை எனது பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் எந்த ஒரு சட்டமன்ற தொகுதிகளிலும் விவசாயிகளின் விலை பொருட்களை பாதுகாக்க குளிர்சாதன  கிடங்குகள் இல்லை. இதனால் தொகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு சரிவர விலை கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் விவசாய மக்களுக்கு குளிர்சாதன கிடங்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்.

 

அதுபோல் விவசாயத்திற்கும் தொகுதி மக்களுக்கும் போதுமான குடிநீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள் அவர்களுடைய குறைகளை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும் என தொகுதி தொடர்பான பல பிரச்சனைகளை முன்வைத்து மத்திய அமைச்சரான நரேந்திரசிங் தோமரிடம் கோரிக்கை மனுவை எம்.பி.வேலுச்சாமி  கொடுத்திருக்கிறார். ஆனால் வேலுச்சாமி திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினராகி சில மாதங்களிலேயே மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டு வருவதை கண்டு தொகுதிகளில் உள்ள பொதுமக்களும்  மாற்று கட்சியினரும் கூட எம்.பி.வேலுச்சாமியை பாராட்டி வருகிறார்கள் 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.