Skip to main content

சாலையாக மாறிய ஓடை... பொதுமக்கள் போராட்டம்!!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான ஓடைகள் தூர்வாரும் பணிகள், தடுப்பணை, மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
 

dindugal issue


பொதுமக்களும் சாலை மறியல், ஊராட்சி அலுவலகம் முற்றுகை  உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் - செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அதிகாரிகளின் சமரசத்திற்கு பின்பு மறியலை கைவிட்டனர். இந்நிலையில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 20வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு குறுவச்சி ஓடையை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் மூலம் சுமார் 6 இலட்சம் செலவில் தூர்வாரினார்கள். தற்போது அந்த ஓடையை தனியார் ஒருவரின் தோட்டத்தில் வீட்டடி மனைகளாக பிரிப்பதற்காக நீர் வரத்து ஓடையில் மண் மற்றும் சரளை மண்னை கொட்டி சாலையாக அமைத்து வருவதற்கு அண்ணாநகர் மற்றும் இந்திராகாலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் தரையில் படுத்து பணியை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் பிரிவில் மனு கொடுத்ததற்கு குறுவச்சி ஓடையை தூர்வாரியுள்ளோம் என்ற அறிக்கையை தந்துவிட்டு தனியாருக்காக ஓடையை தார்சாலையாக மாற்றி வருவது கிராம மக்களையும் நீர் வளம் காப்பவர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஜோசப் கூறுகையில், "கலிக்கம்பட்டி குளத்தில் நீர் நிரம்பி குறுவச்சி ஓடை வழியாக மழைநீர்; வந்து அருகில் உள்ள வாழைகுளம், பிலிப்பான்ஸ் குளத்திற்கு செல்லும். தற்போது வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணி ஓடையை சாலையாக மாற்ற உத்தரவிட்டுள்ளார். இதனால் அருகில் உள்ள இந்திரா காலனிக்குள் மழைநீர் மற்றும் வெள்ளநீர் புகுந்து உயிர் பலி ஏற்படுத்திவிடும்" என்றார்.

அண்ணாநகரை சேர்ந்த வானரசி கூறுகையில், "தமிழகம் முழுவதும் நீர் வரத்து பாதைகளை பாதுகாத்து குறைந்து வரும் நிலத்து நீரை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் ஆத்தூர் ஒன்றியத்தில் மட்டும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுப்பிரமணி நீர்வரத்து பாதையை தனியார் ஒருவருக்கு தார் சாலை அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" என்றார்.

இந்திரா காலனியை சேர்ந்த சேசுராஜ் கூறுகையில், "ஆத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணி குறுவச்சி ஓடையை 6 இலட்சம் செலவில் தூர் வாரியதாக கணக்கு காண்பித்துள்ளார். இதுபோல் குறுவச்சி ஓடையின் மேற்குப்பகுதியில் 10 இலட்சம் செலவில் தூர்வாரியதாக கணக்கு காட்டியுள்ளார். ஆனால் இப்போது 6 இலட்சம் செலவில் தூர்வாரிய ஓடையின் மீது சாலையை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அரசு அதிகாரியே அரசு பணத்தை முறைகேடு செய்வது வேதனையாக இருக்கிறது" என்றார்.

அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வினோத் அருளானந்தம் கூறுகையில், "ஓடையின் கிழக்குப்புறம் தனியார் காண்டிராக்டர் ஒருவரின் தோட்டம் உள்ளது. குறுவச்சி ஓடையை தார் சாலையாக மாற்றி அவரது தோட்டத்தை மனைகளாக பிரிப்பதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரியும், ஊராட்சி செயலரும், பணம் பெற்றுக்கொண்டு இந்த ஏற்பாடை செய்து வருகின்றனர். இதனால் மழை பெய்தால் அண்ணாநகர் மற்றும் இந்திரா காலனிக்குள் மழைநீர் புகுந்துவிடும். உயிர் சேதமும் ஏற்பட்டுவிடும்" என்றார்.
 

dindugal issue


மத்திய அரசு பணத்தில் ஓடையை தூர்வாரியதாக கணக்கு காண்பித்துவிட்டு அந்த ஓடையின் மீது மண்ணை கொட்டி தார்சாலை அமைக்க அனுமதி கொடுத்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் ஊராட்சி செயலர் சேசுராஜை பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று என்.பஞ்சம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து முறைகேடுகள் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வருவதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட திட்ட இயக்குநர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஓடையின் மீது சாலை அமைக்க உத்தரவிட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி மீது மதுரை உயர்நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தமிழக அரசு பாதுகாத்து வரும் நிலையில் நீர்வரத்து பாதையை தார்சாலையாக மாற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி மீது மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.