Skip to main content

காவல்நிலையத்திற்குள்ளேயே தற்கொலை முயற்சி!!!

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
police station

 

திண்டுக்கல், தாண்டிக்குடி காவல்நிலையத்தில் ஆய்வாளர் தகாத வார்த்தையில் திட்டியதாகக்கூறி  எழுத்தர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆய்வாளர் சுபகுமார் காவல்நிலையத்திலுள்ள அனைவரையும் தகாத வார்த்தையில் திட்டியதாகக்கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த எழுத்தாளர் முருகேஷன் காவல்நிலையத்திற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், உடனிருந்த காவலர்கள் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. அவர் தன் தற்கொலைக்கு காரணம் ஆய்வாளர் என அறிவிப்பு பலகையில் எழுதியுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் விசாரித்து வருகிறார். காவல்துறையினர் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கின்றனர் என கூறப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்