Skip to main content

குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற திண்டுக்கல் மாணவி! தங்கச்செயின் வழங்கிய தாளாளர்!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் கலந்து கொண்டன. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தின் வீராங்கனையாக திண்டுக்கல் ஜி.டி.என்.கலைக்கல்லூரியின் உடற்கல்வித்துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி கலைவாணி குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டார். இந்த குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

 Dindigul student wins gold medal in boxing


இப்படி தெற்காசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி கலைவாணி திண்டுக்கல்லுக்கு வந்தார். அவரை பாராட்டி வரவேற்கும் வகையில் திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டு வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே கல்லூரி மாணவிகள் பெருந்திரளாக நின்றனர். அங்கிருந்து ஜி.டி.என். கலைக்கல்லூரி வரை தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்ல தயாரானார்கள். இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு கால்பந்தாட்ட மாநிலத் துணைத் தலைவரும், விளையாட்டுத்துறையின் தந்தையுமான ஜி.சுந்தரராஜன் துவங்கி வைத்தார். அதன்பின் திறந்த ஜீப்பில் மாணவி கலைவாணியை மாணவர்கள் தாரை, தப்பட்டை முழங்க ஐந்து கிலோ மீட்டர் தூரமுள்ள ஜிடிஎன் கல்லூரி வரை வரவேற்று அழைத்துச் சென்றனர். அப்போது வழிநெடுகிலும் அங்கங்கே கல்லூரியில் உள்ள விளையாட்டு சங்கத்தை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் மாணவியை பாராட்டி மாலை, சால்வை போட்டு வரவேற்று அனுப்பி வைத்தனர். அதன்பின் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நுழைந்த மாணவி கலைவாணியை கல்லூரியின் செயலாளரும், தாளாளருமான லயன் டாக்டர் கே.ரத்தினமும், இயக்குனருமான துரைரத்தினமும் வாழ்த்தி வரவேற்று தங்கச்செயின் பரிசாக வழங்கினார்கள். அதன்பின் கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கலைவாணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
 

 Dindigul student wins gold medal in boxing

 

இந்த பாராட்டுவிழாவில் கல்லூரிச் செயலாளரும், தாளாளருமான கே.இரத்தினம் கலந்து கொண்டு பேசும்போது,  நம்முடைய கல்லூரி தமிழகத்தில் என்ன, பல்லைக்கழகத்தில் என்ன, இந்தியாவில் என்ன உலகத்திலேயே முதல் கல்லூரியாக வருவதற்கு நான் காரணமாக இருப்பேன் என்று அருமை மகள் கலைவாணி கூறியதை கேட்டு கண்கலங்கிவிட்டேன். வாழ்த்துகிறேன். அதுபோல் என்னைப் பொறுத்தவரை கலைவாணியும், அவருடைய குழுவினரும் எதிர்காலத்தில் அந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு தங்கப்பதக்கங்களை பெற்று தங்கமகளாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். எதிர்காலத்தில் இதுபோல் தங்கமங்கைகள் கல்லூரிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று சாதனை படைக்க வேண்டும் அதுபோல கலைவாணியின் பெற்றோருக்கும் எனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

 Dindigul student wins gold medal in boxing

 

இதில் பேசிய மாணவி கலைவாணியோ... தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வாங்கியதற்கு முழுக்காரணமே எங்களுடைய கல்லூரி செயலாளரும், இயக்குனரும்தான் அந்த அளவுக்கு என்னை கல்வியிலும், விளையாட்டிலும் ஊக்கப்படுத்தி தேவையான பொருள் உதவிகளும் செய்தனர். அதன்மூலம் தான் நான் தெற்கு ஆசியப்போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றேன் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல் எனது தந்தை எனக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து உற்சாகப்படுத்தியதால்தான் நான் தங்கப்பதக்கம் பெற முடிந்தது. மேலும் இதுபோல பல பதக்கங்களை பெறுவதற்கும் நான் முயற்சி செய்வேன் என்று கூறினார். இந்த பாராட்டுவிழாவில் கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன், கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, துணை முதல்வர் நடராஜன், உடற்கல்வி இயக்குநர் ராஜசேகரன் மற்றும் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் அரசன்எஸ்.சண்முகம், மத நல்லிணக்க காவலர் நாட்டாண்மை காஜாமைதீன், திபூர்சியஸ் மற்றும் பேராசிரியர்களும், உடற்பயிற்சி ஆசிரியர்களும், மாணவ,மாணவிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.