Skip to main content

அதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன்கூட  பதவிக்கு வரமுடியும்!  அமைச்சர் சீனிவாசன்  பகீர் பேச்சு!!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

 

அதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கூட பதவிக்கு வரும் நிலை உள்ளது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

d


      திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்ட செயலாளர் மருதராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுபோல் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மைத்துனரான கண்ணனும் மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.   இந்த இருவரும் இன்று மத்திய கூட்டுறவு வங்கியில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

 

 இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகள் கூறினார். அதன்பின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  பேசும் போது...... தற்போது பதவி ஏற்றுள்ள தலைவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை.   கடந்த பல ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சிப்பணி மற்றும் மக்கள் பணியாற்றி உள்ளனர். பதவி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை.

 

d

 

அதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரும் நிலை உள்ளது. அதன்படி கடுமையாக உழைத்தால் பதவி உங்களை தேடிவரும் எதிர்க்கட்சியினர் தற்போது அதிமுக மேற்கொண்டு வரும் குடிமராமத்து பணிகளை குறைகூறி வருகின்றனர். ஆனால் இது மிகவும் அருமையான தமிழகத்தின் முன்னோடியான திட்டமாகும் வறட்சியின் பிடியில் உள்ள மக்கள் குடிமராமத்து திட்டத்தினால் நீர் நிலங்களில் தண்ணீர் தேக்கி பயனடைந்து வருகின்றனர்.

 

 மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்றனர் என்று கூறினார்.

 
இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி,  செட்டிநாயக்கன்பட்டி கூட்டுறவு சங்க துணைத் தலைவர்  ராஜமோகன், திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி  தலைவர் பிரேம்,  அபிராமி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் பாரதி முருகன், முன்னாள் கவுன்சிலர் சோனா சுருளி, முன்னாள் எம்பி உதயகுமார், ஒட்டன்சத்திரம் பாலசுப்ரமணி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், நத்தம் ஜாஜகான், சாணார்பட்டி ராமராஜ், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய பேரவை செயலாளர் சிவாஜி,  ஆவின் தலைவர் செல்லச்சாமி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி  நிர்வாக இயக்குனர்  உமாமகேஸ்வரி. கூட்டுறவு சங்கங்களின் மண்டல  இணைப்பதிவாளர் குமார் உள்பட கடசி பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் பலர் கலந்து கொண்டனர். 
   

சார்ந்த செய்திகள்

Next Story

முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைப்பு

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Dindigul Srinivasan who received the Muthuramalinga Devar Gold Shield

 

கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவர் கோவிலில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்க 3.4 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் தங்கக் கவசம் ஒன்றை வழங்கியிருந்தார். அதிமுக மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதிமுக பொருளாளர் பொறுப்பில் தங்க கவசம் வைக்கப்பட்டு வருவது வழக்கம். தேவர் ஜெயந்தி தினங்களில் மட்டும் அந்த தங்கக் கவசம் முத்துராமலிங்க தேவர் சிலை மீது சாற்றப்படும். மற்ற நேரம் அவை மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்படும். முன்னர் அதிமுக ஒற்றுமையாக இருந்த காலத்தில் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் வசம் தங்கக்கவசம் இருந்தது.

 

அண்மையில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக சிக்கல்கள் ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த தங்கக் கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சாற்ற யார் பொறுப்பேற்பது என்ற சிக்கல் அதிமுகவில் உருவெடுத்தது. தாங்கள்தான் ஒரிஜினல் அதிமுக எனவே தங்க கவசத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஓபிஎஸ் தரப்பிலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டது.

 

அதிமுக தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தங்கக் கவசத்தை யாரும் பெறக்கூடாது என உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே உயர்நீதிமன்றம் அதிமுக குறித்த அனைத்து தெளிவான உத்தரவுகளையும் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு தற்போது பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அந்த விதியின் படி திண்டுக்கல் சீனிவாசன் காப்பாளராக செயல்பட்டு தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு சாத்திவிட்டு மீண்டும் வங்கியில் ஒப்படைக்கலாம். இதற்கும் உச்சநீதிமன்ற நிலுவைக்கும் சம்பந்தமில்லை என உத்தரவிட்டிருந்தார்.

 

Dindigul Srinivasan who received the Muthuramalinga Devar Gold Shield

 

இந்நிலையில் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் இருந்த தங்க கவசத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து அவர் இந்த தங்க கவசத்தை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனா என்பவரிடம் வழங்கினார். அப்போது அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

 

 

Next Story

“சொல்லிக் கொடுத்ததை தான் ஆளுநர் பேசியுள்ளார்” - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Governor has spoken what he promised says Dindigul Srinivasan

 

திருச்சி மாவட்டத்தில் மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (23-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஆரியம், திராவிடம் என ஒன்று கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காவே கால்டுவெல் போன்றோர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு போராடிய மருது சகோதரர்களும், முத்துராமலிங்க தேவர் ஆகியோரும் வெறும் சாதித் தலைவர்களாக கருதப்படுகின்றனர்.

 

காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பார்கள். தியாகிகளை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர்” என்று கூறி இருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் நினைவிடத்தில் மருது சகோதரர்களின் 222-வது நினைவு நாளையொட்டி, அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  சந்தித்து பேசினார்.

 

அப்போது அவர், ஆளுநர் பேசியது குறித்து பேசுகையில், “என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அதை தான் அப்படியே ஆளுநர் பேசியுள்ளார். என்ன சொல்லி இருக்கிறார் என்பதைப் பற்றிய செய்தி எங்களுக்கு தெரியாது. விடுதலை போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்று யார் கூறினாலும் அது தவறு. ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலை வைத்தது, நினைவு மண்டபம் கட்டியது, அஞ்சல் தலை வெளியிட்டது என அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்தார்.