Skip to main content

திண்டுக்கல் சீனிவாசன் மகன் வீட்டில் திருடியவர்கள் கைது... எஸ்பி-க்கு பாராட்டு...

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகன் வெங்கடேசன் திண்டுக்கல் நகரில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி குடும்பத்துடன் சென்னை சென்றார் வெங்கடேசன் அப்போது வீட்டின் படுக்கை அறையில் புகுந்த திருடர்கள் 50 பவுன் நகை மற்றும் 4 லட்சத்தை திருடி சென்றனர்.
 

sakthivel

 

 

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில்  புகார் கொடுத்ததின் பேரில் விசாரணை செய்து வந்தனர். மேலும் எஸ்பி சக்திவேல் உத்தரவின்படி டிஎஸ்பி மணிமாறன் தலைமையில் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்ஏ மகேஷ், சிறப்பு எஸ்.ஏ.களான நல்ல தம்பி, வீரபாண்டி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
 

இந்த நிலையில்தான் திண்டுக்கல் அருகே உள்ள பெரிய பள்ளபட்டி சேர்ந்த பாண்டியை  தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது.... அமைச்சர் மகன்  வெங்கடேசனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். இதனால் எனது நண்பர் பூதிபுரம் பாலாஜிநகரை சேர்ந்த வினோத்குமார், வெள்ளோடு ரவிக்குமார் ஆகியோருடன் அமைச்சரின் மகன் வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்று ஜன்னல் கம்பியை அறுத்து பணம் மற்றும் நகைகளை திருடினோம். திருடியதில்
 90 ஆயிரத்தை செலவு செய்து விட்டோம் எனக் கூறினார்.
 

அதனடிப்படையில் அமைச்சர் மகன்  வெங்கடேஷிடம் டிரைவராக வேலை பார்த்த பாண்டி, வினோத் குமார், ரவிக்குமார் ஆகிய மூன்று  பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 லட்சத்து 10 ஆயிரமும் 50 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். இப்படி அமைச்சர் மகன் வீட்டில் திருடு போன பணத்தையும் நகைகளையும் போலீசார் கண்டு பிடித்ததை கண்டு பொதுமக்களே எஸ்.பி.சக்திவேலை பாராட்டி வருகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.