Skip to main content

இரவு நேரத்தில் கடைகளை திறக்கக் கூடாதா? வியாபாரிகள் கேள்வியும் காவல்துறையின் பதிலும்...

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

 

கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் ஹோட்டல், பெட்டிகடைகள், டீ கடைகள் உள்பட வியாபார தலங்களை வியாபாரிகள் திறந்து வைத்துக் கொள்ளலாம் என அறிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கினார்கள்.

 

dindigul



அதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் முதல்வர் உத்தரவின்படி பல இடங்களில் இரவு கடைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நத்தம் உள்பட பலபகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய பகுதிகளில் இரவு கடை என்பது அறவே இல்லை. எப்பொழுதும்போல் இரவு பதினொரு மணிக்குமேல் கடைகளை வைக்ககூடாது என போலீசார் வழக்கம்போலவே கடைக்காரர்களை, பெட்டி கடைகளை, ஹோட்டல்களையும் அடைக்க வைத்து வருகிறார்கள்.
 


இதனால் பஸ் பயணிகள் இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போது தங்கள் குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் கூட வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அதோடு பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள சில கடைக்காரர்களிடமும் ஹோட்டல் உரிமையாளர்களிடமும் கேட்டபோது, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஓரளவுக்கு இரவு கடைகள் வைத்திருந்தோம், அவர் மறைவுக்கு பிறகு வியாபாரமும் இல்லை இரவு கடைகளையும் வைக்கக்கூடாது என போலீசார் நெருக்கடி கொடுத்தனர். இரவு 11 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டு உள்பட நகரில் எந்த ஒரு பகுதிகளிலும் இரவு கடைகள் இல்லாத அளவுக்கு கொண்டு வந்தனர். 
 

dindigul


 

இதனால் டீ கடைக்கள், ஹோட்டல்கள் மற்றும் பிளாட் பாரத்தில் உள்ள சிறு கடைகாரர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தோம். அதிலேயும் 11 மணிக்கு அடைக்க வேண்டிய கடைகளுக்கு பத்தரை மணிக்கு எல்லாம் போலீசார் சைரன் சவுண்டு கொடுத்து முதலில் லைட்டை ஆப் பண்ண சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு கடைகளை அடைக்க சொல்வார்கள். ஆனால் பஸ் ஸ்டாண்டுகளை பொருத்தவரை கடைகளை உடனுக்குடன் அடைக்கவும் முடியாது. அதுனால லைட்டை ஆப்பண்ணிவிட்டு ஸ்கிரீன் போட்டு வெளியே படுத்து விடுவதால் சில நேரங்களில் பொருட்கள் திருடுபோயும் விடுகிறது. அதற்கு சம்பள பணத்தில் கொடுக்க வேண்டிய நிலையும் இருந்து வந்தது. 
 

இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கலாம் என உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நாங்களும் இரவு கடைகளை திறந்து வைக்க முன்வந்தோம். ஆனால் போலீசார் உடனே எங்களை எல்லாம் அழைத்து இரவு கடைகள் எல்லாம் வைக்க வேண்டுமென்றால் ஒரு கடைக்கு 10 பேராவது வேலை பார்க்கவேண்டும். அதோடு ஒவ்வொரு கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்திக் கொள்ள வேண்டும் அதற்கு தயார் என்றால் நீங்கள் கடைகளை திறந்து வையுங்கள் இல்லையென்றால் வழக்கம்போல் பதினோரு மணிக்கு கடைகளை அடைத்து விடவேண்டும் இந்த விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து வைத்தீர்கள் என்றால் உங்க மேல் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டினார்கள்.


 


அதனால இரவு கடைகளை வைப்பதும் இல்லை நடக்கிற வியாபாரத்திற்கு பத்துபேரைவேலைக்கு வைக்கமுடியாது. சிசிடிவி கேமராபொருத்தவும் முடியாது அதுனால இரவு கடைகளை திறந்து வைப்பதில்லை. ஆனால் தேனி, மதுரை, திருச்சி போன்ற பல ஊர்களில் உள்ள பஸ் ஸ்டாண்டில் கூட இரவு கடைகள் படு ஜோராக நடந்து வருகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும்தான் பஸ் ஸ்டாண்டில் கூட இரவு கடைகள் வைக்கக்கூடாது என போலீசார் கெடுபிடி செய்கிறார்கள்.
 

 

அதையும் மீறி வைத்தால் உடனே எங்களை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் அடித்து துன்புருத்தி விடிய விடிய உட்காரவைத்து அதற்கு ஒரு அபராதமும் போட்டு விடுகிறார்கள். அதுபோல் தொடர்ந்து கடைகள் நடத்தினீர்கள் என்றால் கஞ்சா கேஸ்சில் உள்ளே போய்விடுவீர்கள் என மிரட்டுகிறார்கள். அதனாலேயே இரவுக் கடைகளை வைப்பதில்லை.


 

 

தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கலாம் என உத்தரவிட்டும் கூட அதை காற்றில் பறக்க விடும் அளவுக்கு போலீஸார் செயல்பட்டு வருகிறார்கள். கடைகள் திறந்து இருந்தால்தான் திருட்டு குற்றங்களை தடுக்க முடியும் ஆனால் போலீசார் கடைகளை அடைக்க சொல்வதன் மூலம் திருட்டு குற்றங்களும் மாவட்டத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்கள். 

 

மேலும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதல்வர் உத்தரவின்படி பஸ்டாண்டு உள்பட பல பகுதிகளில் இரவு கடைகள் செயல்பட்டு வருகிறது. அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பஸ் ஸ்டாண்டுகள் உள்பட சில முக்கிய பகுதிகளில் இரவு கடைகள் நடத்த மாவட்ட எஸ்பி சக்திவேல் அனுமதி வழங்கவேண்டு என சிறு பெரும் வியாபாரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றார்.

 

dindigul



இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேலை தொடர்புகொண்டு கேட்டபோது, ''வியாபாரிகள் டி.எஸ்.பி.யை சந்தித்து இரவு கடைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்குமாறு மனு கொடுத்தனர். இதையடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள வியாபரிகளை அழைத்து இதுதொடர்பாக கூட்டம் நடத்த டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில், கடைகளில் சிசிடிவி கேமராமக்கள் பொருத்த வேண்டும், எந்த இடத்தில் இரவு கடைகள் திறக்க திட்டமிட்டுள்ளீர்கள், அந்த இடத்தை தெரிவித்தால் போலீசார் இரவு ரோந்து வரும்போது அதனையும் கவனத்தில் கொள்வார்கள். போலீசாரின் ரோந்து பணிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம் என இரவு கடைகள் வைப்பதற்கு விதிமுறைகள் எடுத்து சொல்லப்பட்டது. போலீசார் யாரையும் இரவு கடைகள் வைக்கக்கூடாது என்று டார்ச்சர் செய்யவில்லை. அது தவறான தகவல். வியாபாரிகளுக்கான குறைகளை எந்த நேரத்திலும் எஸ்.பி. அலுவலகத்தில் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.