Skip to main content

சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை: பனியன் கடை உரிமையாளர் மனைவி உட்பட 6 பேர் கைது! 

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
police

 

சினிமா பாணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து டாஸ்மாக் ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் கடை உரிமையாளர் மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100 பவுன் நகைகள் 5 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரம் அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன். இவர் டாஸ்மாக் கடை ஊழியராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி அருணா தேவி. அந்தப் பகுதிகள் அங்கன்வாடி ஊழியராக வேலை செய்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி காளீஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்தார். அவருடைய மனைவி வேலைக்குச் சென்று விட்டார். அப்போது அவருடைய வீட்டின் முன்பு ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டிப்-டாப்பாக இறங்கிய சிலர் வீட்டுக்குள் சென்று காளீஸ்வரனிடம் விசாரித்தனர். வந்த ஆசாமிகள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் போலீசார் என்று கூறினர் மேலும் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வீடு முழுவதும் சோதனை  செய்த பின்னர் வீட்டில் பீரோவை திறந்து காண்பிக்கும்படி அவர்கள் கூறினர். அதற்கு தன்னிடம் பீரோ சாவி இல்லை என்றும் தனது மனைவியிடம்தான் சாவி இருக்கிறது என்றும் காளீஸ்வரன் கூறினார்.

 

இதையடுத்து அந்த ஆசாமிகள் காரில் அங்கன்வாடிக்குச் சென்று அருணாதேவி அழைத்து வந்தனர். மேலும் சோதனை செய்வதற்கு வசதியாக பீரோவை திறந்து காட்டும் படி அவரை மிரட்டினர். சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியதால் மிரண்டுபோன அருணாதேவி  உடனே பீரோவில் இருந்த நகைகள் பணம் மற்றும் நிலத்துக்கான பத்திரங்களைக் காட்டினார். அதனை எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர்.

 

அதிகாரிகளாக வந்தவர்கள் மீது சந்தேகம் அடைந்த காளீஸ்வரன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஒரு லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள் நில பத்திரங்களை எடுத்துச் சென்றதாகக் கூறி இருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் வந்து மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது. எனவே அது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எனினும் கொள்ளையர்கள் குறித்து எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையே திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டாக ரவளி பிரியா ஆகியோர் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இதையடுத்து  நீண்ட நாட்களாகக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கபடாமல் இருந்த நிலையில் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர்.

 

police

 

அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்துக்  கொள்ளையடித்த வழக்கை விசாரித்து கொள்ளையர்களைப் பிடிக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவிட்டார். மேலும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து பாஸ்டின் தினகரன் ஏடுகள், சங்கர நாராயணன் சந்தியாகு செந்தில் குமார் மருதபாண்டி அருளானந்தம் பிரபாகரன் ஆகியோர் கொண்ட  தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

 

அப்போது சம்பவத்தன்று அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்ஃபோன் எண்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கார் மற்றும் சந்தேக நபர்களின் உருவத்தைக் கொண்டு விசாரித்தனர். திருப்பூரைச் சேர்ந்த ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பிச் சென்று விசாரித்ததில் காளீஸ்வரன் உறவினரும் திருப்பூர் மாவட்டம் சாமுண்டி புரத்தைச் சேர்ந்த பனியன்க டைை உரிமையாளருமான கோபி தனது கூட்டாளியுடன் சேர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகைகள் பணத்தைக் கொள்ளையடித்துக் கண்டுபிடித்தனர்.

 

CNC

 

மேலும் கொள்ளையடித்த நகைகள் பணத்தை வைத்து கோபி தனது மனைவி மகன் பெயரில் சொத்துகள் வாங்கியது தெரியவந்தது இதைத்தொடர்ந்து கோபி அவருடைய மனைவி மாலதி மகன் வினோத் மற்றும் கோபியின் கூட்டாளிகளான  சண்முக நகரைச் சேர்ந்த ஐயப்பராஜன் முத்துக்குமார் அவனாசி சேர்ந்த கோபால் செட்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 100 பவுன் நகைகள் 5 லட்சம் மற்றும் 5 கோடி மதிப்பிலான சொத்துகளை ஆவணங்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 'தானா சேர்ந்த கூட்டம்' என்னும் சினிமாவில் கதாநாயகன் சி.பி.ஐ. அதிகாரி வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி கொள்ளை அடிப்பதே பாணியில் காளீஸ்வரன் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது எனவே கைதான 6 பேருக்கும் ஏதாவது கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் மேலும் இந்தக் கொள்ளை சம்பவம் அரங்கேறி ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அதற்கு முந்தைய நாளான நேற்று  கொள்ளையர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.