Skip to main content

சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை: பனியன் கடை உரிமையாளர் மனைவி உட்பட 6 பேர் கைது! 

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
police

 

சினிமா பாணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து டாஸ்மாக் ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் கடை உரிமையாளர் மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100 பவுன் நகைகள் 5 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரம் அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன். இவர் டாஸ்மாக் கடை ஊழியராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி அருணா தேவி. அந்தப் பகுதிகள் அங்கன்வாடி ஊழியராக வேலை செய்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி காளீஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்தார். அவருடைய மனைவி வேலைக்குச் சென்று விட்டார். அப்போது அவருடைய வீட்டின் முன்பு ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டிப்-டாப்பாக இறங்கிய சிலர் வீட்டுக்குள் சென்று காளீஸ்வரனிடம் விசாரித்தனர். வந்த ஆசாமிகள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் போலீசார் என்று கூறினர் மேலும் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வீடு முழுவதும் சோதனை  செய்த பின்னர் வீட்டில் பீரோவை திறந்து காண்பிக்கும்படி அவர்கள் கூறினர். அதற்கு தன்னிடம் பீரோ சாவி இல்லை என்றும் தனது மனைவியிடம்தான் சாவி இருக்கிறது என்றும் காளீஸ்வரன் கூறினார்.

 

இதையடுத்து அந்த ஆசாமிகள் காரில் அங்கன்வாடிக்குச் சென்று அருணாதேவி அழைத்து வந்தனர். மேலும் சோதனை செய்வதற்கு வசதியாக பீரோவை திறந்து காட்டும் படி அவரை மிரட்டினர். சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியதால் மிரண்டுபோன அருணாதேவி  உடனே பீரோவில் இருந்த நகைகள் பணம் மற்றும் நிலத்துக்கான பத்திரங்களைக் காட்டினார். அதனை எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர்.

 

அதிகாரிகளாக வந்தவர்கள் மீது சந்தேகம் அடைந்த காளீஸ்வரன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஒரு லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள் நில பத்திரங்களை எடுத்துச் சென்றதாகக் கூறி இருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் வந்து மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது. எனவே அது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எனினும் கொள்ளையர்கள் குறித்து எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையே திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டாக ரவளி பிரியா ஆகியோர் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இதையடுத்து  நீண்ட நாட்களாகக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கபடாமல் இருந்த நிலையில் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர்.

 

police

 

அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்துக்  கொள்ளையடித்த வழக்கை விசாரித்து கொள்ளையர்களைப் பிடிக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவிட்டார். மேலும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து பாஸ்டின் தினகரன் ஏடுகள், சங்கர நாராயணன் சந்தியாகு செந்தில் குமார் மருதபாண்டி அருளானந்தம் பிரபாகரன் ஆகியோர் கொண்ட  தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

 

அப்போது சம்பவத்தன்று அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்ஃபோன் எண்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கார் மற்றும் சந்தேக நபர்களின் உருவத்தைக் கொண்டு விசாரித்தனர். திருப்பூரைச் சேர்ந்த ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பிச் சென்று விசாரித்ததில் காளீஸ்வரன் உறவினரும் திருப்பூர் மாவட்டம் சாமுண்டி புரத்தைச் சேர்ந்த பனியன்க டைை உரிமையாளருமான கோபி தனது கூட்டாளியுடன் சேர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகைகள் பணத்தைக் கொள்ளையடித்துக் கண்டுபிடித்தனர்.

 

CNC

 

மேலும் கொள்ளையடித்த நகைகள் பணத்தை வைத்து கோபி தனது மனைவி மகன் பெயரில் சொத்துகள் வாங்கியது தெரியவந்தது இதைத்தொடர்ந்து கோபி அவருடைய மனைவி மாலதி மகன் வினோத் மற்றும் கோபியின் கூட்டாளிகளான  சண்முக நகரைச் சேர்ந்த ஐயப்பராஜன் முத்துக்குமார் அவனாசி சேர்ந்த கோபால் செட்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 100 பவுன் நகைகள் 5 லட்சம் மற்றும் 5 கோடி மதிப்பிலான சொத்துகளை ஆவணங்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 'தானா சேர்ந்த கூட்டம்' என்னும் சினிமாவில் கதாநாயகன் சி.பி.ஐ. அதிகாரி வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி கொள்ளை அடிப்பதே பாணியில் காளீஸ்வரன் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது எனவே கைதான 6 பேருக்கும் ஏதாவது கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் மேலும் இந்தக் கொள்ளை சம்பவம் அரங்கேறி ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அதற்கு முந்தைய நாளான நேற்று  கொள்ளையர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.