Skip to main content

மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய ஆசிரியர்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் டி.சுரேஷ் பட்டதாரி ஆசிரியரான இவர் அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியல் 10- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். 


மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மீது அதிக பற்று கொண்ட ரமேஷ், அவரின் 88- வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று 15.10.2019 செவ்வாய்கிழமை மாலை 04.00 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் விழா நடைபெற்றது. 

dindigul govt school teacher trees donated have in students


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுகிர்தா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை பியூலா முன்னிலை வகித்தார். 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் டி.சுரேஷ், வேம்பு, புங்கை, மகாகனி, படாக், மாதுளை, புளி, சீதாப்பழ மரக்கன்றுகளை வழங்கினார். மாணவர்கள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை வாங்கி சென்றனர். மரக்கன்றுகள் வழங்கியது குறித்து பள்ளி ஆசிரியர் டி.சுரேஷ் கூறுகையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் மண் வளம் காத்து மரக்கன்றுகளை அதிகளவில் வளர்க்க வேண்டும் என கூறி வந்தார். 


மேலும் அவருடைய சொல்லை கேட்டு பலர் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். தமிழக அரசும் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் மூலம் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் நட்டு வருகிறது. மாணவர்களுக்கு இளம் வயதிலேயே மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வத்தை ஏற்படுத்தினால், அவர்கள வருங்காலத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் நட்டு காற்று மாசு அடைவதை தடுக்க முடியும் என்றார். தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய ஆசிரியர் சுரேஷை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.