Skip to main content

மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய ஆசிரியர்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் டி.சுரேஷ் பட்டதாரி ஆசிரியரான இவர் அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியல் 10- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். 


மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மீது அதிக பற்று கொண்ட ரமேஷ், அவரின் 88- வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று 15.10.2019 செவ்வாய்கிழமை மாலை 04.00 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் விழா நடைபெற்றது. 

dindigul govt school teacher trees donated have in students


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுகிர்தா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை பியூலா முன்னிலை வகித்தார். 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் டி.சுரேஷ், வேம்பு, புங்கை, மகாகனி, படாக், மாதுளை, புளி, சீதாப்பழ மரக்கன்றுகளை வழங்கினார். மாணவர்கள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை வாங்கி சென்றனர். மரக்கன்றுகள் வழங்கியது குறித்து பள்ளி ஆசிரியர் டி.சுரேஷ் கூறுகையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் மண் வளம் காத்து மரக்கன்றுகளை அதிகளவில் வளர்க்க வேண்டும் என கூறி வந்தார். 


மேலும் அவருடைய சொல்லை கேட்டு பலர் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். தமிழக அரசும் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் மூலம் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் நட்டு வருகிறது. மாணவர்களுக்கு இளம் வயதிலேயே மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வத்தை ஏற்படுத்தினால், அவர்கள வருங்காலத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் நட்டு காற்று மாசு அடைவதை தடுக்க முடியும் என்றார். தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய ஆசிரியர் சுரேஷை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.