Skip to main content

"மழைநீர் சேமித்தல்" குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பேச்சு!

Published on 03/09/2019 | Edited on 03/09/2019


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் வேளாண் அறிவியல் மையம், காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக செவ்வாய்க்கிழமை காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கில் ஜல்சக்தி அபியான் (நீர் மேலாண்மை இயக்கம்) சார்பாக கே.வி.கே-வின் விவசாய மேளா நடத்தப்பட்டது. 

DINDIGUL GANDHIGRAMAM DEEMED UNIVERSITY COLLECTOR SPEECH RAIN WATER HARVESTING

இந்த விழாவிற்கு காந்திகிராம பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் முனைவர் சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சரவணன்(பொறுப்பு) வரவேற்று பேசினார். பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் நீர்மேலாண்மை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார். விழாவில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மழைநீரை சேமித்து வேளாண் உற்பத்தியைப் பெருகுவதுடன் விவசாயிகள் தங்களின் லாபத்தை பெருக்க புதிய தொழில்நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும். 

DINDIGUL GANDHIGRAMAM DEEMED UNIVERSITY COLLECTOR SPEECH RAIN WATER HARVESTING


மழைநீரை நாம் சேமித்தால் தான் வருங்கால சந்ததியினரை பாதுகாக்க முடியும். திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் மேலாண்மை இயக்கம் (ஜல்சக்தி அபியான்) சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் பெய்யும் மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாதுகாப்பதற்காக அனைத்து குளங்களையும் தூர்வாரி வருகிறோம். ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித்துறை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள குளங்களையும், நீர்நிலைகளையும் தூர்வாரி வருகின்றனர். 

DINDIGUL GANDHIGRAMAM DEEMED UNIVERSITY COLLECTOR SPEECH RAIN WATER HARVESTING

பொதுமக்கள் தினசரி பயன்படுத்தக் கூடிய தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மையை பாதுகாக்க வேண்டும் என்றார். முன்னதாக பேசிய திட்ட இயக்குநர் கே.கவிதா அவர்கள் கடந்த 2003ம் வருடம் தமிழகத்தில் மழைநீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் அவற்றை நாம் முறையாக செயல்படுத்தாததால் நிலத்தடி நீர் வெகு ஆழத்திற்கு சென்றுவிட்டது. மீண்டும் நாம் மழைநீரை பாதுகாக்க முறையாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 
 

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் மதுபாலன்,(பயிற்சி), வேளாண்துறை இணை இயக்குநர் பாண்டிதுரை, வேளாண்துறை செயற்பொறியாளர் பார்த்தசாரதி, வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்  சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் நீர் மேலாண்மை இயக்க குறித்த சிறப்பு மலரை வெளியிட்டார். காந்திகிராமம் பல்கலைகழக பல்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.