Skip to main content

திண்டுக்கல் பூச்சொரிதல் விழா! பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

உலகப் புகழ்பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல் இந்த வருடத் திருவிழா துவங்கியது இந்த கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் விநாயகர், ஐயப்பன், முருகன், அமர்ந்திருக்க தேரின் நடுவில் பிரம்மாண்டமாய் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 

Dindigul flower Function! Thousands of devotees piled on!

 

இந்த பூத்தேர் கோவிலில் இருந்து புறப்பாடு நடைபெற்று கிழக்கு ரத வீதி, மேற்குரத வீதி, பழனி ரோடு, தெற்குரத வீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தது. இப்படி கோட்டை மாரியம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்ததை கண்டு மாநகரில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெருந்திரளாக வந்து அந்தந்தப் பகுதியில் சாலை ஓரங்களில் நின்று கோட்டை மாரியம்மனுக்கு காணிக்கையாக பூக்களை பக்தர்கள் செலுத்தி கோட்டை மாரியம்மனை தரிசித்துச் சென்றனர்.

 

Dindigul flower Function! Thousands of devotees piled on!


கோட்டை மாரியம்மனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அங்கங்கே அன்னதானமும் நீர்மோர், பானக்கம் மற்றும் பொங்கல், புளியோதரை  பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த பூச்சொரிதல் விழாவை சிவசக்தி நாகராஜ் மற்றும் டாக்டர் காஞ்சனா நாகராஜ் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இப்படி கோட்டைமாரியம்மன் நகரில் பூத்தேர் மூலம் உலா வருவதை பொதுமக்கள் நேரடியாகவே வீட்டில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது இதனால் வீட்டிலிருந்த பொதுமக்கள் கூட கோட்டை மாரியம்மனை வீட்டில் இருந்தவாரே தரிசித்தனர்.

 

Dindigul flower Function! Thousands of devotees piled on!


அதனை தொடர்ந்து வருகின்ற 25ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று. அதை தொடர்ந்து 15 நாளைக்கு கோட்டை மாரியம்மன் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. அந்தத் திருவிழாவின்போது பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக தீச்சட்டி எடுப்பது பூக்குழி இறங்குவதும் அங்க பிரதஸ்னம்  உள்பட பல வேண்டுதல்களையும் கோட்டை மாரியம்மனுக்கு செலுத்துவார்கள். அதுவும் தினசரி கோட்டைமாரியம்மன் நகரில் மின் அலங்காரத்தால் பவனி வரும் காட்சியை பார்ப்பதற்காக மக்கள் பெருந்திரளாக திரள்வார்கள் இதற்காக திண்டுக்கல் மட்டுமல்ல மாவட்ட அளவிலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி கோட்டை மாரியம்மனை தரிசிக்க திண்டுக்கலுக்கு படையெடுத்து வர இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.