Skip to main content

’இனிமேல் நீங்கள் வேலைவெட்டிக்கு போக தேவையில்லை; வீடுதேடி மாதம் ஆறாயிரம் உதவித்தொகை வரப்போகிறது’- ஐ.பெரியசாமி பேச்சு!

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

 

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திமுக வேட்பாளராக போட்டியிடும் வேலுச்சாமியை ஆதரித்து திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பெரியசாமி  தீவிரமாக ஆத்தூர் ஒன்றியத்தில் வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

 

p

 

பிள்ளையார்நத்தத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் வேட்பாளர் ப.வேலுச்சாமி மற்றும் தோழமைக்கட்சி நிர்வாகிகளுடன் பிள்ளையார்நத்தம், ஆலமரத்துப்பட்டி, என்.பஞ்சம்பட்டி, முன்னிலைக்கோட்டை, செட்டியபட்டி, காந்திகிராமம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் கலிக்கம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வந்த திமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் வேட்பாளர் ப.வேலுச்சாமிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பஞ்சம்பட்டி அருகே குளத்து வேலையில் ஈடுபட்டிருந்த 300க்கும் மேற்பட்ட மக்களிடம் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி வாக்கு சேகரித்தார்.

 

அதன்பின் பொதுமக்கள் மத்தியில் பேசிய ஐ.பெரியசாமியோ,  திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக விவசாயி வேலுச்சாமியை நிறுத்தியுள்ளோம். அவருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் 8 வருடங்களாகியும் ஆத்தூர் ஒன்றியத்திற்குள் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. கடந்த 2 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அதிகாரிகள் வச்சதுதான் சட்டமாகிவிட்டது. கிராம ஊராட்சிகளில் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது. 

 

p

 

வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் காட்டு தர்பாரால் கிராமங்கள் முழுவதிலும் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று கேட்டால் முறையான பதில் கிடையாது. இதற்கு காரணம் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறாததே என்றார். 

 

மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆட்சி அமையும் போது 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு தினசரி கூலியாக ரூ.300 கிடைக்கும். அதுபோல் அனைத்து மக்களுக்கும் வருடத்திற்கு 72ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க ராகுல் இருக்கிறார். அதன்மூலம் மாதந்தோறும் உங்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வீடுதேடி வந்துவிடும். இனிமேல் நீங்கள் வேலைவெட்டிக்கு கூட போக தேவையில்லை. அந்த அளவுக்கு மக்களுக்கு உதவி செய்ய பிரதமராக வரக்கூடிய ராகுல் தயாராக இருக்கிறார். 

 

ஆகவே, பொதுமக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் வேலுச்சாமியை அமோகமாக வெற்றிபெறச் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

தேர்தல் பிரச்சாரத்தில் தோழமை கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் மார்க்கிரேட்மேரி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சி.முரளிதரன், ஒன்றிய துணை செயலாளர் எம்.சி.பாண்டியன், பொருளாளர் கலிக்கம்பட்டி லெட்சுமணன் மற்றும் மாவட்ட பிரதிநிதி தங்கவேல், ஒன்றிய அவைத்தலைவர் வீரய்யா, பிள்ளையார்நத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் என்.எஸ்.நிக்சன்பால், புவனேஸ்வரி அருளரசன் மற்றும் கலிக்கம்பட்டி ஊராட்சி கழக செயலாளர் அருளரசன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.