Skip to main content

தாய்ப்பால் கொடுங்கள்- கர்ப்பிணி பெண்களிடம் கெஞ்சிய பெண் எம்எல்ஏ!

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் 261 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மாலை அணிவித்து, சந்தனம் பூசி, வளையல் அணிவித்த எம்எல்ஏ தேன்மொழி அனைவருக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
 

இந்த  நிகழ்ச்சியின் இறுதியில்  சட்டமன்ற உறுப்பினர்  தேன்மொழி பேசும்போது... பெண்கள் தாய்மை அடைவது மிகப்பெரிய வரப்பிரசாதம், நீங்கள் கர்ப்பமான மாதம் தொடங்கியது முதல் குழந்தை வளர்ச்சி ஆரம்பிக்கும் போது, கருவில் இருக்கும் குழந்தைக்கு நீங்கள் பேசுவது அனைத்துமே கேட்கும். நீங்கள் உங்கள் மாமனார் மாமியாருடன் மற்றும் உறவினர்களுடன் சண்டை போடும் வார்த்தைகளை குழந்தை கேட்கும். எனவே யாரிடமும் சண்டை போடாதீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள். சந்தோசமாக இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சுகப்பிரசவம் தான் சிசேரியனுக்கு அவசியமில்லை.

dindigul district  pregnant women function Breastfeeding  very important child health  MLA  speech


மேலும் குழந்தை பிறந்தவுடன் ஒரு மாதத்திலே புட்டிபால் கொடுத்து விடாதீர்கள். அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தாய்ப்பால் தரவில்லை என்றால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். அறிவார்ந்த குழந்தைகள் ஆரோக்கியமான குழந்தைகள் வளர வேண்டுமென்றால் அவசியம் தாய்ப்பால் கொடுங்கள்... மீண்டும் மீண்டும் உங்களை கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து தாய்ப்பால் கொடுங்கள் என்று உருக்கமாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளரும் எம்.எல்.ஏவின் கணவருமான சேகர். முன்னாள் எம்.பி.உதயக்குமார் மற்றும் நகர ஒன்றிய பொருளாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.