Skip to main content

தாய்ப்பால் கொடுங்கள்- கர்ப்பிணி பெண்களிடம் கெஞ்சிய பெண் எம்எல்ஏ!

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் 261 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மாலை அணிவித்து, சந்தனம் பூசி, வளையல் அணிவித்த எம்எல்ஏ தேன்மொழி அனைவருக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
 

இந்த  நிகழ்ச்சியின் இறுதியில்  சட்டமன்ற உறுப்பினர்  தேன்மொழி பேசும்போது... பெண்கள் தாய்மை அடைவது மிகப்பெரிய வரப்பிரசாதம், நீங்கள் கர்ப்பமான மாதம் தொடங்கியது முதல் குழந்தை வளர்ச்சி ஆரம்பிக்கும் போது, கருவில் இருக்கும் குழந்தைக்கு நீங்கள் பேசுவது அனைத்துமே கேட்கும். நீங்கள் உங்கள் மாமனார் மாமியாருடன் மற்றும் உறவினர்களுடன் சண்டை போடும் வார்த்தைகளை குழந்தை கேட்கும். எனவே யாரிடமும் சண்டை போடாதீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள். சந்தோசமாக இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சுகப்பிரசவம் தான் சிசேரியனுக்கு அவசியமில்லை.

dindigul district  pregnant women function Breastfeeding  very important child health  MLA  speech


மேலும் குழந்தை பிறந்தவுடன் ஒரு மாதத்திலே புட்டிபால் கொடுத்து விடாதீர்கள். அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தாய்ப்பால் தரவில்லை என்றால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். அறிவார்ந்த குழந்தைகள் ஆரோக்கியமான குழந்தைகள் வளர வேண்டுமென்றால் அவசியம் தாய்ப்பால் கொடுங்கள்... மீண்டும் மீண்டும் உங்களை கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து தாய்ப்பால் கொடுங்கள் என்று உருக்கமாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளரும் எம்.எல்.ஏவின் கணவருமான சேகர். முன்னாள் எம்.பி.உதயக்குமார் மற்றும் நகர ஒன்றிய பொருளாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.