Skip to main content

முடி வெட்டுவதற்கு கட்டுப்பாடு! காவல்துறையின் அதிரடி உத்தரவு!!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

Dindigul District police involved in inspection

 

திண்டுக்கல் பகுதிகளில் நடந்துவரும் குற்றங்களைத் தடுக்க போலீசார் துப்பாக்கியுடன் வாகன சோதனை நடத்திவருவதோடு புள்ளிங்கோ இளைஞர்களைப் பிடித்து எச்சரித்தும் வருகிறார்கள்.

 

கடந்த 22ஆம் தேதி நந்தவனப்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலைக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி அதே நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலாவை பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் படுகொலை செய்து தலையை வெட்டி பசுபதிபண்டியன் வீட்டுமுன் போட்டுவிட்டுச் சென்றனர். 

 

Dindigul District police involved in inspection

 

இந்தப் பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே அனுமந்தராயன்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் ஸ்டீபன் என்ற இளைஞரின் தலையை வெட்டி ரோட்டில் வைத்துவிட்டுச் சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரே நாளில் இரண்டு படுகொலைகள் செய்யப்பட்டு தலைகளை ஆங்காங்கே வீசியது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்துதான் போலீசாரும் அதிரடி வேட்டையில் இறங்கி, இரண்டு கொலைக் குற்றவாளிகளையும் கைது செய்திருக்கிறார்கள். அதேவேளையில், இனிவரும் காலங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

 

Dindigul District police involved in inspection

 

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், ரவுடிகளின் நடவடிக்கையைக் கண்காணித்துவருகிறார்கள். அதேபோல் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க துப்பாக்கியோடு வலம்வந்து கொண்டும் இருக்கிறார்கள். 

 

அதன்படி திண்டுக்கல் நகர இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  டூவீலரில் வந்த இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர்கள் காதுகளில் கம்மலை மாட்டிக்கொண்டு புள்ளிங்கோ ஸ்டைலில் முடியை வெட்டிக்கொண்டு, முடியில் கலரிங் செய்திருப்பது தெரிந்தது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், உடனே அவர்கள் காதில் போட்டிருந்த தோடுகளைக் கழட்டச் சொல்லியும், அந்த இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லியும் அனுப்பிவைத்தார். அதோடு புள்ளிங்கோ ஸ்டைலில் சலூன் கடைக்காரர்கள் முடி வெட்டி, கலர் அடிக்கக்கூடாது. மீறி நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சலூன் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சலூன் கடை உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டமும் மாவட்ட அளவில்  நடைபெற உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.