DINDIGUL DISTRICT POLICE CUSTODY INCIDENT COURT JUDGEMENT

கடந்த 2010ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், வட மதுரையில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைகைதி செந்தில்குமார் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து, சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்டக் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisment

இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் இன்று (27/04/2021) தீர்ப்பு வழங்கியுள்ளது.அதன்படி, சார் ஆய்வாளர் திருமலை முத்துசாமி மற்றும் தலைமைக் காவலர்கள் பொன்ராம், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.