ADVERTISEMENT

'நத்தம் பகுதியில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு'- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு!

12:42 PM Jul 10, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நாளை (11/07/2020) முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 11- ஆம் தேதி முதல் ஜூலை 20- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பால், மருந்தகங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்படும். இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT