Skip to main content

ஆயிரம் ஆடுகள்...1700 கோழிகளுடன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் களைகட்டிய சமபந்தி விருந்து! 

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

திண்டுக்கல் மாநகரில் உள்ள மலைக்கோட்டைக்கு பின்புறம் அமைந்துள்ளது முத்தழகுபட்டி. இந்த முத்தழகு பட்டியில் பெரும்பான்மையாக கிறிஸ்தவ மக்களே வசித்து வருகிறார்கள். இங்குள்ள புனித செபஸ்தியார் திருத்தலத்தில் வருடந்தோறும் ஆடி மாதம் கடைசியில் மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கடந்த 4- ஆம் தேதி புனித செபஸ்தியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

 

DINDIGUL DISTRICT MALAIKKOTTAI  St. Sebastian FESTIVAL The feast of the Samapandi

 

இரண்டாம் நாள் புனித செபஸ்தியார் மின் அலங்காரத்தில் ஊரில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்தார். அதை தொடர்ந்து மூன்றாம் நாள் செபஸ்தியாருக்கு நேர்த்திக்கடன்  வைத்திருந்த பக்தர்கள் அரிசி, காய்கறிகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை  காணிக்கையாக  வழங்கினார்கள். இதில் திண்டுக்கல் மாநகரில் கூலி வேலை பார்க்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் எல்லாம் முத்தழகுபட்டியை சேர்ந்த  கூலித் தொழிலாளிகள் என்பதால், அவர்கள் வருடந்தோறும் தங்கள் சங்கங்கள் மூலமாக ஆடுகளை காணிக்கையாக செலுத்துவது  வழக்கம்.

 

DINDIGUL DISTRICT MALAIKKOTTAI  St. Sebastian FESTIVAL The feast of the Samapandi

 

 

அதுபோல் இந்த ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக ஒரு சங்கத்துக்கு மூன்று, நான்கு ஆடுகள் என நூற்றுக்கணக்கான ஆடுகளை புனித செபஸ்தியாருக்கு காணிக்கை செலுத்த மேல தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று, முத்தழகு பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் காணிக்கையாக செலுத்தினார்கள். அதேபோல் புனித செபஸ்தியாருக்கு வேண்டுதல் காணிக்கையாக ஆடுகள், கோழிகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்தனர்.

 

 

DINDIGUL DISTRICT MALAIKKOTTAI  St. Sebastian FESTIVAL The feast of the Samapandi

 

இப்படி புனித செபஸ்தியாருக்கு ஆயிரம் ஆடுகள், 1700 கோழிகள்  காணிக்கையாக பக்தர்கள் கொண்டு வந்தன. ஆடுகள், கோழிகளை ஊரில் உள்ள மக்களும், கோவில் நிர்வாகிகளும் இணைந்து, பக்தர்கள் வழங்கிய ஆடு கோழிகளை கொண்டு அசைவ விருந்து தயார் செய்யும் பணியில் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கறி விருந்தை தயார் செய்தன. அதன் பிறகு சமைத்த சாப்பாட்டை மலைபோல் குவித்தனர்.

DINDIGUL DISTRICT MALAIKKOTTAI  St. Sebastian FESTIVAL The feast of the Samapandi

 

பின்பு தயாரான ஆடு கோழி கறிகளையும்  அண்டா அண்டாவாக வைத்தனர். கறி விருந்தை சாப்பிட பொதுமக்கள் பெரும் திரளாக சாதி மதம் பார்க்காமல், அனைத்து தரப்பினரும் வரிசையில் நின்று விடிய விடிய சாப்பிட்டு வருகிறார்கள். அதோடு புனித செபஸ்தியாருக்கு ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் டோக்கன் வழங்கும். அதை வைத்து பக்தர்களும், பொதுமக்களும் பாத்திரங்களை கொண்டு வந்து அன்னதானத்தை வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர். புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மூலம் திண்டுக்கல் மாநகரம் விழா கோலமாக காட்சி அளிக்கிறது.
 

 

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.