Skip to main content

குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி ஐ.பி. தலைமையில் திமுக எம்எல்ஏகள்  கலெக்டரிடம் மனு!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய  நான்கு சட்டமன்ற தொகுதிகள் திமுக வசம் உள்ளது.   இந்த நிலையில்  தான் தற்பொழுது மாவட்டத்தில்  நிலவி வரும் வறட்சியால் மக்கள் குடிக்கவே தண்ணீர்  இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.  அதோடு நகரம் முதல் குக்கிராமங்கள் வரை இருக்கக் கூடிய மக்கள் குடி தண்ணீரை கூட ஒரு குடம் பத்து ரூபாய்க்கு வாங்கி குடிக்கும் அவலநிலையில் இருந்து வருகிறார்கள்.

 

i


அந்த  அளவுக்கு திமுக  ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை ஆத்தூர், ஒட்டன்சத்திரம்,  பழனி, நத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள  மக்களுக்கு முழுமையாக கொண்டு  செல்லவில்லை.  அதனால் தான் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  கடந்த ஆண்டு கூட ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதை கண்டு  தொகுதி எம்.எல் ஏ. சக்கரபாணி பொதுமக்களை திரட்டி வந்து கலெக்டர் அலுவலகத்தில் போராட்டமே நடத்தினார்.   அப்படி  இருந்தும் மக்களின்  குடிநீர் பிரச்சனையை  தீர்த்து வைக்க மாவட்ட கலெக்டர் வினைய் ஆர்வம் காட்டவில்லை.


 
 இந்த நிலையில் தான் தற்பொழுது மாவட்டத்தில்  ஏற்பட்டு வரும் கூடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில்  தீர்த்து வைக்க வேண்டும் என கழக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் மற்றும்  நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் ஆகியோர் மாவட்ட கலெக்டர் வினையை கலெக்டர் அலுவலகத்திலையே  சந்தித்து  மாவட்டத்தில்  ஏற்பட்டு வரும் குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில்  தீர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

 

அதோடு காவேரி கூட்டு குடிநீர்   மற்றும் ஆத்தூர் டேம் தண்ணீரையும் முழுமையாக மக்களுக்கு கொடுக்க வேண்டும்  என்பதையும் கலெக்டரிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம்  கேட்டுக்கொண்ட கலெக்டர்,  மாவட்டத்தில்  குடிநீர் பிரச்சனை ஏற்படாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.பி.யிடம் உறுதி கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேருக்கு பதவி உயர்வு... ஆணையை வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி! 

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

 

Promotion to 40 people from the same district... Minister I. Periyasamy gave the order!


திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் எழுத்தர் மற்றும் முதுநிலை எழுத்தர் 40 பேருக்கு பொது பணிநிலைத்திறன் கீழ் பதவி உயர்வு மற்றும் பணி ஒதுக்கீடு ஆணையினை ஒரே நாளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கி உத்தரவிட்டார். 

 

அதன்படி, பொது பணிநிலைத் திறன் குழுவின் தலைவரும், திண்டுக்கல் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளருமான கோ.காந்திநாதன் உத்தரவினை வெளியிட்டார். இந்த நிலையில், நேற்று (01/10/2022) அதற்கான ஆணையை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் செயலாளருக்கு வழங்கினார். 

 

அப்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, தமிழக கூட்டுறவுத் துறை இந்தியாவே போற்றும், அளவிற்கும் சிறப்பான துறையாக மாறி வருகிறது. பதவி உயர்வு பெறும் கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி பதவி உயர்வும், இடமாறுதலும் வழங்கப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகளின் சிறப்பான பணியினால் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்" என்றார். 

 

நிகழ்ச்சியின்போது திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் காந்திநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் பிள்ளையார் நத்தம் முருகேசன், பாறைப்பட்டி ராமன், திண்டுக்கல் சரக கூட்டுறவுத் துறையின் துணைப் பதிவாளர் முத்துக்குமார், மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Next Story

"தி.மு.க. ஆட்சியில்தான் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்படுகிறது"- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

"It is in the DMK regime that orders of appointment based on mercy are given immediately"- Minister I. Periyasamy's speech!

 

கூட்டுறவுத் துறையில் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகள் மூன்று பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவுக் கல்லூரி யில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் காந்திநாதன் தலைமை தாங்கினார். கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை சேவுகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிந்த முருகனின் உறவினர் வசந்திக்கு, கூட்டுறவு வேளாண்மை சங்கத்தில் ஏவலர் பணியும், வத்தலக்குண்டு பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் கூட்டுறவு சிக்கன நாணயத்தில் பணிபுரிந்த சீனிவாசன் என்பவரின் மகன் விக்னேஷ்வரனுக்கு, டிடி523 மேட்டுப்பட்டி கூட்டுறவு நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் சிற்றெழுத்தர் பணியும், கிழக்கு செட்டியபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியின்போது உயிரிழந்த விசுவநாதன் உறவினர் கிஷோர் மங்களத்திற்கு கிழக்கு செட்டியப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் விற்பனையாளர் பணிக்கான ஆணையையும் அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். 

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போது தான் கூட்டுறவுத் துறையில் பணியின் போது, இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் வருட கணக்கில் காத்திருந்தவர்களுக்கு கூட தி.மு.க. ஆட்சியில் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுகிறது" என்று கூறினார்.