Skip to main content

கறிக்கடையில் பறிமுதல் செய்யப்பட்ட கறியை கூறுபோட்டு கொண்ட காக்கிகள்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

கரோனாவிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டு இருப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ஆனால் அத்தியவாசிய பொருட்கள் வாங்க காலையில் மட்டும் வெளியே போய் வருகிறார்கள். இப்படி போக கூடிய மக்கள் பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள கறிக்கடை கோழி கடைகளுக்கு சென்று கறிகளையும் வாங்கி வருகிறார்கள். இப்படி கறிகளை வாங்க செல்லும் மக்கள் இடைவெளிவிட்டு நிற்காமல் கூட்டமாக கடைகளில் நிற்பதால் அதன் மூலமும் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கிறது என்று கருதிய தமிழக அரசு திடீரென கறிகடைகளை இழுத்து மூடச் சொல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

  dindigul



 
அதன் அடிப்படையில்தான் கடந்த ஐந்தாம் தேதி தமிழகத்தில் அனைத்து கடைகளும் இழுத்து மூடப்பட்டாலும் கூட, அங்கங்கே கறிக்கடைகள் விற்பனை செய்தும் வந்தனர். அதுபோல்தான்  திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அரசு உத்தரவின்படி இழுத்து மூடப்பட்டது. ஆனால் சிலர் ஆங்காங்கே கறிக்கடைகளை உள்புறமாக பூட்டி வைத்துக் கொண்டு மறைமுகமாக பொதுமக்களுக்கு ஆட்டு கறிகளை ஒரு கிலோ ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரைக்கும் கொடுத்து வந்தனர். அதுபோல் கோழிக்கறியும் கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் சிறுமலை அடிவாரத்தில் ஆட்டிறைச்சி கடை நடத்தி வந்த அபுதாகிர் என்பவர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆட்டுக்கறி கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் சாணார்பட்டியில் உள்ள தனது வீட்டில் ஒரு கிலோ, இரண்டு  கிலோ என பொட்டலம் போட்டு கொடுக்க வைத்து இருந்தார்.
 

nakkheeran app



இந்த விஷயம் தாலுகா டி.எஸ்.பி.  வினோத்துக்கு தெரியவே உடனே காக்கிகளுடன் ஸ்பாட் விசிட் அடித்து கறிக்கடை உரிமையாளரான அபுதாகிரையும் கூப்பிட்டு கொண்டு வீட்டில் வாடிக்கையாளர்களுக்காக  கொடுக்க வைக்கப்பட்டிருந்த 58 ஆயிரம் ரூபாய் பெருமான ஆட்டுக்கறியையும் பறிமுதல் செய்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதனடிப்படையில் தாலுகா காவல் நிலையத்தில் உள்ள போலீசாரும் கடை உரிமையாளரான அபுதாகிர் மேல் வழக்குப் பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டுக்கறியை ஏதாவது ஒரு இடத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.  ஆனால் காவல் நிலையத்தில் இருந்த காக்கிகளோ அந்த ஆட்டு கறியை ஆளுக்கு ஒரு கிலோ இரண்டு கிலோ என கூறு போட்டு கொண்டு வீடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டனர். அதை கேள்விப்பட்டு கறிக்கடை உரிமையாளரும் மனம் நொந்து போய்விட்டார். இந்த விஷயம் காக்கிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார்.