Skip to main content

கூட்டணி கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி - அதிருப்தியில் திமுகவினர்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Dindigul Constituency Alliance Party?-Unhappy UPs

திண்டுக்கல் தொகுதியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் சீட்டுக்காக மல்லு கட்டி வந்தனர். சிட்டிங் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரான வேலுச்சாமி கடந்த தேர்தலில் ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கியதின் பேரில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வாங்கி முதல் இடத்தை பிடித்த பெருமையும் இந்தியாவில் மூன்றாவது இடத்தை பிடித்த பெருமையும் பெற்றார். அந்த அளவிற்கு திண்டுக்கல் மாவட்டம் தி.மு.க. கோட்டையாக இருக்கிறது.

கடந்த தேர்தலைவிட இந்த தேர்தல் களத்தில் 17 பேர் விருப்ப மனு வாங்கி நேர்காணலிலும் கலந்து கொண்டு வந்து விட்டனர். அவர்களில் ஒருவரைத் தான் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணியும் பரிந்துரை செய்ததின் பேரில், திமுக தலைவர் ஸ்டாலின் அவரை வேட்பாளராக அறிவிப்பார் என்ற அடிப்படையில்தான் ஒட்டுமொத்த தொண்டர்களும் இருந்து வந்தனர். அதோடு மீண்டும் இத்தொகுதியில் சூரியன்தான் உதிக்குமே தவிர கூட்டணிக் கட்சிக்கு தொகுதி என்ற பேச்சே கிடையாது. அதுவும் கடந்த முறையை விட இந்த முறை இந்தியாவிலேயே அதிக ஓட்டு வாங்கி முதல் இடத்தை பிடித்து தலைவரிடமும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு அமைச்சர்களும் இப்பொழுதே தேர்தல் களத்தில் உடன்பிறப்புகளை உசுப்பி விட்டு இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்துதான் தொகுதிகளில் இப்பொழுதே உதயசூரியன் சின்னத்தையும் உடன்பிறப்புகள் வரைந்து வந்தனர்.

Dindigul Constituency Alliance Party?-Unhappy UPs

இந்த நிலையில்,  திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்ததின் பேரில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 21 தொகுதிகளில் ஆளுங்கட்சியான தி.மு.க. நேரடியாக போட்டி போடுகிறது. அதோடு கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கியதின் பேரிலேயே இந்த முறையும் 18 தொகுதிகளையும், ஸ்டாலின் ஒதுக்கி கொடுத்திருக்கிறார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியின் சிட்டிங் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதுரை மற்றும் கோவையில் இருந்து வருகிறார்கள்.

அதுபோலவே இந்த முறையும் இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் கோயம்புத்தூர் தொகுதியில் இந்தமுறை போட்டி போடாமல் திண்டுக்கல் தொகுதியில் சி.பி.எம்.போட்டியிடுகிறது. 

Dindigul Constituency Alliance Party?-Unhappy UPs

முன்னதாக திமுக கோட்டையாக உள்ள திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கக் கூடாது. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி தலைமைக்கு கடிதம் மூலமும் வலியுறுத்தினர். அதோடு உடன்பிறப்புகள் பலர் இத்தொகுதியை கூட்டணி கட்சியான சி.பி.எம்.க்கு கொடுக்கக் கூடாது என்று இரத்தத்தால் கையெழுத்து போட்டு தலைவருக்கும், தலைமைக்கும் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே மாவட்டத்தின் தலைநகரான திண்டுக்கல் தொகுதி, கூட்டணி கட்சியான சி.பி.ஐ.க்கு ஒதுக்கியதன் பேரில் தான் எதிர்க்கட்சி இத்தொகுதியை தக்க வைத்துக் கொண்டு வருகிறதே தவிர அதன் மூலம் எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை. அதேபோல் தான் இத்தொகுதியில் சி.பி.எம். போட்டி போட்டால் அது அதிமுகவுக்கு சாதகமாக அமைய கூட வாய்ப்பு இருக்கு. அதன் மூலம் திமுக கூட்டணி ஒரு தொகுதியை கூட இழக்க வாய்ப்பு இருக்கிறது.

இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் சிலரிடம் கேட்டபோது, 'எங்களுக்கு எப்போதும் போல் மதுரையும் கோவையும் ஒதுக்கி விடுங்கள் என்று சொல்லி தான் இரண்டு தொகுதிகளுக்கு ஒப்பந்தமும் போட்டு இருக்கிறோம். அப்படி இருக்கும் போது இப்ப திடீரென கோயமுத்தூரை விட்டுவிட்டு திண்டுக்கல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு கோயம்புத்தூர் தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் அந்த தொகுதியில் போட்டியிடுவது எளிது. இதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆத்தூர், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திண்டுக்கல், பழனி சட்டமன்ற தொகுதிகளில் தான் கட்சி வளர்ச்சி இருக்கிறது. அதுபோல் மற்ற தொகுதிகளில் சரிவர கிளைகள் இல்லை. கட்சி வளர்ச்சி என்பது பெரிதாக ஒன்றுமில்லை. இந்த ஆறு தொகுதிகளில் மூன்று தொகுதிகள் ஆளுங்கட்சியான தி.மு.க.விடமும் மற்ற மூன்று தொகுதிகள் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விடமும் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஆளுங்கட்சியை சேர்ந்த தி.மு.க. இத்தொகுதியில் போட்டி போட்டால் தான் வெற்றி பெற முடியுமே தவிர, நாங்கள் போட்டியிட்டால் வெற்றி என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும். 

Dindigul Constituency Alliance Party?-Unhappy UPs

நாங்கள் போட்டியிட்டோம் என்று தெரிந்தாலே எதிர்க்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது மச்சான் கண்ணனை தேர்தலில் இறக்க தயாராகி வருகிறார். அப்படி அவர்  நிறுத்தவில்லை என்றால், முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தனது மகன் சதீஸை நிறுத்தவும் தயாராகி வருகிறார். இப்படி இரண்டு அமைச்சர்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை தேர்தலில் நிறுத்த அதிமுகவும் தயாராகி வருகிறது.

இந்த விஷயம் கேள்விப்பட்ட உடனே, இரண்டு அமைச்சர்களுமே திமுக கோட்டையாக உள்ள தொகுதியை எப்படி தலைமை, கூட்டணி கட்சிக்கு ஒதுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் வேண்டாம் என்று கூறியும் வலுக்கட்டாயமாக இத்தொகுதியில் போட்டி போட சொல்வதற்கு என்ன காரணம் என்ற கேள்வியையும் ஒருபுறம் எழுப்பி வருகின்றனர். இதனால் கூட்டணிக்குள் இருந்து வந்த உறவும் தொகுதி பிரச்சனையின் மூலம் பாதமாக அமையக்கூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.

இந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக‌, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் மாறி மாறி வெற்றி பெற்று இருக்கிறது. தவிர இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தொகுதியில் போட்டி போடவில்லை. ஆளுங்கட்சியான திமுகதான் இங்கு பலமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது திமுக வேட்பாளரை, தலைமை களத்தில் இறக்காமல் கூட்டணி கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கி இருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், தி.மு.க. கூட்டணி கட்சியான சி.பி.எம். இங்கு போட்டியிடுவதால், தி.மு.க.வினர் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வேலை செய்வது போலவே வேலை செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. முன்னோடிகள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.