Skip to main content

டாஸ்மாக் பார் கடைகளில் குடி மகன்களுக்கு காக்கா கறி சப்ளை!

Published on 01/07/2019 | Edited on 01/07/2019


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக்  கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக காகங்களை கொன்று எடுத்து சென்ற இரண்டு பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் ஏராளமான காக்கைகள் இறந்து கிடந்தன. அவற்றை இரண்டு பேர் சாக்கு பையில் அள்ளிக் கொண்டு  இருந்தனர். அந்த விஷயம் அப்பகுதி மக்களுக்கு தெரிந்ததின் பேரில் காக்கைகளை கொன்று சாக்கால் அள்ளிக் கொண்டு இருந்த வரதன் மற்றும் மாரிமுத்து ஆகிய  இருவரையும் மடக்கி பிடித்து போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

 

அதன் அடிப்படையில் சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார்  காக்கைகளை கொன்ற இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது தான் அவர்கள் காக்கைகளை விஷம் வைத்த தானியங்களை தூவி சாகடித்து வருவது தெரிய வந்தது அதோடு இப்படி சாகடிக்கப்படும் காக்கைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களுக்கு அனுப்பி வைப்பதின் மூலம் அதை  சைடிஷ்சாக குடிமகன்களுக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

 

 

dindigal district tasmac shop salem crows food and arrested the police

 

 

 

இதனால் டென்ஷன் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இது போல் மாவட்டத்தில் பல இடங்களில் காக்கைகளை விஷம் வைத்து சாகடித்து அள்ளி செல்வது வழக்கமாக இருப்பது தெரிய வந்தது இப்படி தானியங்களில் விஷம் வைத்து சாகடிக்கப்படும் காக்கைகளை  டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்கிறார்கள். அதை டாஸ்மாக் பார் கடைகாரர்கள் இந்த காக்காகறியை காடை கறி என குடிமகன்களுக்கு விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது.

 

 

இதற்கிடையில் காகங்கள் கொல்லப்பட்ட தகவல் அறிந்த பறவைகள் நல அலுவலர் பாரதிதாசன் சம்பவம் இடத்துக்கு வந்து பார்வையிட்டு வனத்துறை அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவம் இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகளும் வந்து தானியங்களில் விஷம் வைத்து சாகடிக்கப்பட காக்கைகளை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இப்படி  குடிமகன்களுக்கு காக்கைகளை கொன்று அதை காடைகறியாக டாஸ்மாக் பார் கடைகளில் விற்பனை செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.