Skip to main content

டி.டி.வி. தினகரன் ஒரு கொசு -அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Published on 15/03/2018 | Edited on 15/03/2018

 

DJAYAKUMAR



அதிமுக என்ற சிங்கத்தின் மீது ஒரு கொசு உட்கார்ந்து சென்று விட்டதாக டிடிவி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 
 

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தது குறித்தும், டிடிவி தினகரன் மதுரையில் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியது குறித்தும் கேள்வி எழுப்பினர். 
 

அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார்,

 

தமிழக அரசுக்கு போதிய பெரும்பான்மை உள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது தவறு.  கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், படிப்படியாக நிறைவேற்றப்படும்.
 

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த வழியில் பட்ஜெட் இருக்கும். தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம், அதன் பிரதிபலிப்பாகவே பட்ஜெட் இருக்கும் . துயரத்தின் வெளிபாடாகவே திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வருகை.
 

சிறப்பு கூட்டம் நடத்துவது குறித்து சட்டப்பேரவை தான் முடிவு செய்யும். அதிமுக என்ற சிங்கத்தின் மீது ஒரு கொசு உட்கார்ந்து சென்று விட்டதாக டிடிவி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்  செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உற்சாகத்தில் ராயபுரம் மனோ.. என்ன நடக்கிறது களத்தில்! வட சென்னை யார் வசம்?

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
What is happening in the Royapuram Who owns North Chennai

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வடசென்னை தொகுதியில் அ.தி.மு.க. வாக்குகளைச் சேகரிப்பதோடு, குறைவான வாக்குகளைப் பெறக்கூடிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்களாம். இத்தொகுதியில், ராயபுரம், திரு.வி.க. நகருக்கு ஜெயக்குமாரும், ஆர்.கே. நகர், பெரம்பூருக்கு ராஜேஷும், திருவொற்றியூருக்கு மாதவரம் மூர்த்தியும், கொளத்தூருக்கு வெங்கடேஷ் பாபுவும் தேர்தல் பொறுப்பாளர்களாகப் பணிகளைப் பார்க்கிறார்கள். திரு.வி.க. நகர் பகுதிக்கு கூடுதல் தேர்தல் பொறுப்பாளராக சீனிவாசனை நியமித்துள்ளார்களாம்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க.வுக்கென இருக்கும் நிரந்தர வாக்குகளோடு, சிறுபான்மையினரின் வாக்குகளையும், இளைஞர்களின் வாக்குகளையும் பெறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளனராம். கடந்த முறை பா.ஜ.க. கூட்டணி காரணமாகக் கிடைக்காத சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காக, அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்குமிடையே எந்தவிதத் தொடர்பும் இல்லையென்பதை எடுத்துரைத்து வாக்குகளைத் திரட்டுகிறாராம் ராஜேஷ். அதேபோல் திருவொற்றியூர் மணலி ஆயில் பிரச்சனைக்கு இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படாததைக் கூறியும் மக்களைத் திரட்டுகிறாராம்.

கொளத்தூரில் மட்டும் தி.மு.க. பலம்வாய்ந்ததாக இருப்பதால் ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளில் அ,தி.மு.க.வுக்கான வாக்கு சதவீதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது அ.தி.மு.க. தலைமை. ஆனால், திரு.வி.க. நகர் பகுதிக்கான பொறுப்பாளரான ஜெயகுமாரோ, தென் சென்னையில் போட்டியிடும் வாரிசுக்கு நிலவரம் கலவரமாக இருப்பதால், வடசென்னையில் ஈடுபாடில்லாமல் செயல்படுகிறாராம். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் வசிக்கும் திரு.வி.க. நகர் பகுதியில், அவர்களின் வாக்குகளைக் கவர்வது குறித்து ஆர்வமின்றி இருக்கிறாராம். ஏற்கெனவே பூத் கமிட்டிக்காக 5 கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதியில், தற்போதுதான் முதற்கட்ட நிதியையே ரிலீஸ் செய்துள்ளாராம். இதுபோன்ற உள்ளடிகளைப் புரிந்துகொண்டு தான் தலைமையே திரு.வி.க.நகருக்கு சீனிவாசனை கூடுதலாக பொறுப்பாளராக்கியது. சீனிவாசனையும் முதலில் செயல்படவிடாமல்,  ‘நீ பேப்பர் ஒர்க்கை மட்டும் பார்த்துக்கொள்’ எனக்கூறி அவரைத் தடுத்திருக்கிறார் ஜெயக்குமார். இதுகுறித்தும் தலைமைக்கு செய்தி போக, தற்போது சீனிவாசனும் தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளார்.

What is happening in the Royapuram Who owns North Chennai

இப்படி சின்னச்சின்ன பிரச்சனைகளைச் சரிசெய்த பின்னர், வடசென்னையில் வெற்றிபெறும் இலக்கோடு உற்சாகத்தோடு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ராயபுரம் மனோ. தொகுதியிலிருக்கும் எளிய உழைப்பாளிகளான இளநீர் விற்பவர்கள், துணி தைப்பவர்கள், ஹோட்டலில் தோசை சுடும் மாஸ்டர் என ஒவ்வொருவரின் பணிகளிலும் தானும் ஈடுபட்டு, அவர்களின் மனதைக் கவர்வதோடு வாக்குகளையும் கவர்ந்தபடி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.

Next Story

துணி தைத்து கொடுத்து அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24)  வடசென்னை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெரம்பூர் வியாபாரிகள் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து அவர், ஓட்டேரியில் உள்ள தையல் கடையில் துணி தைத்துக் கொடுத்து வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு வாக்கு சேகரித்தார்.