Skip to main content

 பொய்மூட்டைகளாக அவிழ்த்துவிடுகிறார் தினகரன் - அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு

Published on 07/10/2018 | Edited on 07/10/2018
kasi

 

அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க, தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என டி.டி.வி தினகரனை சாடினார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

 

திருவாரூர் ஒன்றியம் திருநெய்ப்பர் ஊராட்சி கடுவங்குடி கிராமத்தில் உள்ள திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 50 குடும்பங்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர்,  ‘’தினகரன் திமுகவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்ற முடியாததால்,  பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அப்படித்தான் துணை முதல்வர் விஷயத்திலும் பொய் சொல்கிறார்.

 

தமிழகத்தில் எப்போது எந்த தேர்தல் நடந்தாலும், நாளைய தினம் தேர்தல் நடைபெற்றாலும் இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்.

டெல்டா மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.  தினகரனை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் ஒருபோதும் இல்லை’’ என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Case against former Minister Kamaraj; “Investigation to be completed within 6 months” - High Court

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். அப்போது பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

மேலும் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் 2 ஆயிரத்து 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இரு வழக்குகளும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, “இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர்கள் இருவரும் டிசம்பர் 6 ஆம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜாராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

 

 

Next Story

காமராஜ் மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Madras HC Question What action was taken  complaint against Kamaraj

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த ஆர். காமராஜ் விநியோக திட்ட உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்தது. 

 

இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காமராஜ் தொடர்பான புகார் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் இன்னும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 17 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.