தினகரன் - திவாகரன் மோதல் வலுத்து வரும் நிலையில், ‘’நீண்டதூரம் பயணிக்க விரும்பினால் இணைந்து செல்லுங்கள், வேகமாகச் செல்ல வேண்டுமானால் தனியாக செல்லுங்கள்’’ என்று திவாகரன், தினகரனுக்கு ட்விட்டரில் விவேக் ஜெயராமன் மறைமுக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினகரன் - திவாகரன் மோதல் வலுத்து வரும் நிலையில், ‘’நீண்டதூரம் பயணிக்க விரும்பினால் இணைந்து செல்லுங்கள், வேகமாகச் செல்ல வேண்டுமானால் தனியாக செல்லுங்கள்’’ என்று திவாகரன், தினகரனுக்கு ட்விட்டரில் விவேக் ஜெயராமன் மறைமுக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story
ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவில் உடைப்பு ஏற்பட்டு சசிகலா, தினகரன், திவாகரன், பாஸ்கரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பெயர்களில் கட்சி தொடங்க பரபரப்பு ஏற்பட்டிருந்தது. சிறையிலிருந்து வந்த சசிகலாவுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்று ஒதுக்கப்பட்டார். ஆனால் தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் ஓபிஎஸ் - இபிஎஸ் உடைத்துக் கொண்டு கட்சியை ஒருவரும் கட்சி அலுவலகத்தை ஒருவருமாக கைப்பற்றி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இனி சின்னத்தையும் முடக்குவார்கள் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில்தான் சசிகலாவின் தம்பி திவாகரன் தான் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையில் அதிமுக வில் இணைப்பதாக அறிவித்தார். இன்று இணைப்பு விழா ஏற்பாடுகள் தஞ்சை தமிழரசி மண்டபத்தில் நடந்தது.
Next Story
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் சூடுபிடித்து, மீண்டும் பொதுக்குழு கூடுவதற்கான வழக்கில் நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. மறுபுறம் அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவை மீட்கப் போவதாக அரசியல் பயணத்தைத் தொடங்கி இருக்கும் சசிகலாவுடன் அவரது சகோதரர் திவாகரன் இணை இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை சசிகலாவின் சகோதரரான திவாகரன் நடத்தி வந்த நிலையில் தஞ்சையில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் இணைப்பு விழாவில் சசிகலா தலைமையில் தனது கட்சியை இணைக்க இருக்கிறார் திவாகரன். சசிகலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திவாகரன் கடந்த 2018 ஆம் ஆண்டு 'அண்ணா திராவிடர் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.