மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் லிப்ட் வசதியுடன் கூடிய மாநகரப் பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும் மற்றும் தாழ்தள நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று (20.03.2023) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களைஎழுப்பினர்.