




Published on 27/08/2021 | Edited on 27/08/2021
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையை கூடுதலாக வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கம் சார்பில் எழும்பூர் தாலுகா அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.