Skip to main content

ஜே.சி.பி. இயந்திரங்களின் உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்!   

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

 

diesel price raised jcb owners in cuddalore district

கடலூர் மாவட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. எனப்படும் மண் அள்ளும் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் டீசல் விலை உயர்வாலும், ஜே.சி.பி. இயந்திரங்களின் உதிரி பாகங்கள் மற்றும் ஆயில் விலை ஏற்றத்தாலும், வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதித்துள்ள ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர்கள் விருத்தாச்சலத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஒரு லிட்டர் டீசல் விலை 95.44 பைசா விற்பனையாகி வரும் நிலையில், தற்போது ஒரு மணி நேர வாடகைக்கு ஜே.சி.பி இயந்திரம் இயக்கப்படும் போது 6 முதல் 7 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஒரு மணி நேர வாடகையான 1,100 ரூபாயை வைத்து கணக்கிட்டு பார்த்தால், வாடகை பணத்தில் பாதி டீசல் மற்றும் ஆயிலுக்கே செலவாவதாகவும், ஓட்டுனர் கூலி, தேய்மானம் என அனைத்தும் செலவுகளையும் பார்க்கும் போது உரிமையாளர்களுக்கு எதுவும் மிஞ்சவில்லை என்று கூறுகின்றனர். 

diesel price raised jcb owners in cuddalore district

மேலும் ஜேசிபி இயந்திரத்தில் 2000- க்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் உள்ளதால், வருடத்திற்கு இரண்டு முறை பாராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பராமரிப்பு பணிக்காக 2 லட்சம் செலவு செய்யும் நிலை உள்ளதால் தற்போது டீசல், ஆயில் மற்றும் உதரி பாகங்கள் விலை ஏற்றத்தால் கடன் வாங்கி ஜே.சி.பி. இயந்திரம் இயக்கும் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விருத்தாச்சலம் ஜே.சி.பி உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் இன்று (28/06/2021) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அரசு ஒப்பந்ததாரர், தனியார் ஒப்பந்ததாரர்,  மற்றும் தனி நபர் வேலைக்கு அழைக்கும் பொதுமக்கள் என அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக, ஒரு மணி நேரத்திற்கு ஜே.சி.பி. இயந்திரத்தின் வாடகை 1,500 ரூபாய் விலை ஏற்றம் செய்துள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

 

டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தை, தமிழக அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீசார் அபராதம் வசூல்... வழக்குப்பதிவு...! லாரி உரிமையாளர்கள் புலம்பல்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Police collect fines ... Case ...! Truck owners lament!

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, சரக்கேற்றிச் செல்லும் லாரிகளை மடக்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வதால், தொழில் பாதிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் தனராஜ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது; லாரி தொழில் கரோனா காலத்தில் மிகவும் சிரமத்தில் இயங்கிக் கொண்டு வருகிறது. தற்போது கரோனா மூன்றாவது அலையின்போதும் கூட அரசின் முறையான வழிகாட்டுதலின்படி, லாரி ஓட்டுநர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், வாகனங்களை தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கி வருகின்றனர். 

 

கரோனா ஊரடங்கு காலத்தில் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்வதற்கு அரசு அனுமதி அளித்து உள்ளது. எனினும், நோய்த்தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஒரு சில இடங்களில் காவல்துறையினர் வாகனத்தை வழிமறித்து ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலிக்கின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, லாரி தொழிலுக்கும், ஓட்டுநர்களுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தங்குதடையின்றி கரோனா காலத்தில் லாரிகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். 

 

 

Next Story

பெட்ரோல், டீசல் உயர்வு- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Published on 31/10/2021 | Edited on 31/10/2021

 

Petrol, diesel hike - Communist Party of India protests!

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகிய எரிபொருட்களின் விலைகளைத் தாறுமாறாக ஏற்றி வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டிக்கும் விதமாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று (31/10/2021)தமிழ்நாடு முழுவதும் சைக்கிள் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. 

 

அந்த வகையில், தென்சென்னை மாவட்ட குழு சார்பாக, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ். ஏழுமலை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் இரா.முத்தரசன்  கண்டன உரை நிகழ்த்தினார். 

 

அப்போது அவர், விலையை உயர்த்தியது ஒன்றிய பாஜக அரசு. ஆனால் அதன் காரணமாக மக்களோடு மோதிக் கொண்டிருப்பது ஆட்டோ தொழிலாளர்கள் என்று கூறினார்.