Skip to main content

ஆத்தூர் அணை  அருகே சூரி நடிக்கும் ‘சர்பத்’ படப்பிடிப்பு

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியை சுற்றியுள்ள பகுதி மற்றும் ஆத்தூர் டேம் பகுதி, சடையாண்டி கோவில் ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது மதயானைக் கூட்டம், பரியேறும்பெருமாள் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் கதிர்,  காமெடி நடிகர் சூரி, இளம்கதாநாயகி ரகசியா மற்றும் மாரிமுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஆத்தூர் டேம் அருகே உள்ள சடையாண்டி கோவில் பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. 

 

c


காதல், கல்லூரி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக இருந்த பிரபாகரன் இப்படத்தை இயக்கி வருகிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஸ் தலைமையில் நடனக்குழுவினர் காமெடி நடிகர் சூரிக்கு நடனம் சொல்லிக்கொடுத்து கோவில் முன்பு ஆடுவது போல் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டன. நடிகர் சூரி மஞ்சள் நிறத்தில் புலிவேடம் அணிந்து நடனமாடினார். 

 

பலமுறை டேக் வாங்கியும், சலிக்காமல் டான்ஸ் மாஸ்டர் சதீசிடம் டான்ஸ் மூவ்மெண்ட்டுக்களை கேட்டு நடனமாடினார். படப்பிடிப்பு காட்சிக்காக கோவில் பகுதியில் திருவிழா போல் செட் அமைத்து துரைப்பாண்டி தலைக்கட்டு, அன்புடன் அழைக்கிறேன் என பேனர்கள் வைத்து திருவிழாவின் போது கடை போடும் அனைத்து நபர்களையும் அழைத்து வந்து ஷெட்டிங்ஸ் அமைத்திருந்தனர்.

 

 சின்னாளபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரை தினசரி சம்பளத்திற்கு அழைத்து வந்து திருவிழாவை பார்ப்பது போல் காட்சி அமைத்திருந்தனர். பார்வையாளர்கள் தடை செய்யப்பட்டு ரகசியமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு சர்பத் என தற்போது பெயரிடப்பட்டுள்ளனர்.  பெயர் மாற்றம் இருக்கும் என படப்பிடிப்பினர் கூறினார்கள். 

 

ரகசியமாக படம் எடுப்பது குறித்து படக்குழுவினர் கூறுகையில் குறைந்த பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு வருவதால் படப்பிடிப்பு காட்சிகள் மற்றும் நடிகர்களின் தோற்றங்கள் வெளியே தெரிந்தால் வாட்சப் மற்றும் யூடியூப்பில் வைரலாக பரவிவிடும் என்பதால் ரகசியமாக எடுத்து வருகிறோம் என்றனர். 

 

படக்குழுவினர் வந்த வேன்கள் மற்றம் கார்கள் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வந்த இருசக்கர வாகனங்களை அருகில் உள்ள டேம் தண்ணீரில் சுத்தம் செய்தது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்தது. திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் ஆத்தூர் காமராஜர் டேம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெறும் போது அணைக்கட்டு பகுதியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும்...’ - காதலில் கருடன் சூரி

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
garudan movie soori Panjavarna Kiliye video song released

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.  

இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் கடந்த மாதம் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ‘பஞ்சவர்ண கிளியே...’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் கதாநாயகி ரேவதி ஷர்மா கதாபாத்திரத்திற்கும் சூரி கதாபாத்திரத்திற்குமான காதலை விவரிக்கும் வகையில் உள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக, ‘யாரோட யாரோட என் காதல் கதை பேச. உன் கூட உன் கூட எத வச்சு நான் பேச. மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும். உன்னை பார்த்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.  

Next Story

“இது சீரியஸ் படம் அல்ல, பக்காவான கமர்சியல்” - ராம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
director ram about his Yezhu Kadal Yezhu Malai movie

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திப்ன் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள படக்குழு, விழாவில் பங்கேற்றது. படம் திரையிட்ட பிறகு அது குறித்த அனுபவம் பகிர்ந்த சூரி, “இங்க உள்ள மக்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. இந்த மாதிரி விழாவில் கலந்துகிட்ட பிறகு தான், நம்ம தமிழ் படத்துக்கு எவ்ளவு மரியாதை இருக்கு-ன்னு தெரியுது. கண்டிப்பா இந்தப் படம் உலகளவில் நல்ல பேரை வாங்கும்” என்றார்.    

பின்பு பேசிய ராம், “படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. விழாக்களில் திரையிடுவதால் ரொம்ப சீரியஸ் படம்னு நினைச்சிடாதீங்க. உண்மையாகவே பக்காவான கமர்சியல் படம். கோடைகாலத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாகும்” என்றார்.