Skip to main content

குடிக்க பணம் தரவில்லை; மனைவியைக் கொலை செய்த கணவன்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

Did not pay to drink; The husband wife issue

 

குடிக்க பணம் தர மறுத்த மனைவியை வெட்டிக் கொன்று, கணவனும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் திருமக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள கிராமம் வடக்கு தென்பரை. அந்த கிராமத்தின் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி (63), இவருடைய மனைவி மாரியம்மாள் (57). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் என ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர்.

 

பாலுச்சாமிக்கு அதிக குடிபழக்கம் இருந்திருக்கிறது. அடிக்கடி மது குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்ததும் ஏதாவது காரணம் கூறி மனைவி மாரியம்மாளை அடித்து உதைப்பதோடு, தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

 

இந்நிலையில், பாலுச்சாமி குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி மாரியம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என மாரியம்மாள் கூறிவிட்டு, அருகில் உள்ள வயல் காட்டிற்கு மேய்சலுக்காக ஆடுகளை ஒட்டிக்கொண்டு சென்றுவிட்டார். மது குடிக்க மனைவி பணம் தராத ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற பாலுச்சாமி, தன்னிடம் இருந்த பணத்தில் குடித்துவிட்டு, ஆவேசமாக வீட்டுக்கு வந்தவர், அங்கிருந்த அரிவாளை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு மனைவியைத் தேடி வயலுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளிடம் தகறாரில் ஈடுபட, கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 

Ad

 

இதில் ஆத்திரமடைந்த பாலுச்சாமி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரியம்மாள் துடிதுடித்ததைப் பார்த்துப் பயந்துபோன பாலுச்சாமி வேகவேகமாக வீட்டுக்கு வந்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை காவல்துறையினர் மாரியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற பாலுச்சாமியை மீட்ட போலீசார் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.