Skip to main content

குடிக்க பணம் தரவில்லை; மனைவியைக் கொலை செய்த கணவன்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

Did not pay to drink; The husband wife issue

 

குடிக்க பணம் தர மறுத்த மனைவியை வெட்டிக் கொன்று, கணவனும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் திருமக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள கிராமம் வடக்கு தென்பரை. அந்த கிராமத்தின் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி (63), இவருடைய மனைவி மாரியம்மாள் (57). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் என ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர்.

 

பாலுச்சாமிக்கு அதிக குடிபழக்கம் இருந்திருக்கிறது. அடிக்கடி மது குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்ததும் ஏதாவது காரணம் கூறி மனைவி மாரியம்மாளை அடித்து உதைப்பதோடு, தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

 

இந்நிலையில், பாலுச்சாமி குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி மாரியம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என மாரியம்மாள் கூறிவிட்டு, அருகில் உள்ள வயல் காட்டிற்கு மேய்சலுக்காக ஆடுகளை ஒட்டிக்கொண்டு சென்றுவிட்டார். மது குடிக்க மனைவி பணம் தராத ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற பாலுச்சாமி, தன்னிடம் இருந்த பணத்தில் குடித்துவிட்டு, ஆவேசமாக வீட்டுக்கு வந்தவர், அங்கிருந்த அரிவாளை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு மனைவியைத் தேடி வயலுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளிடம் தகறாரில் ஈடுபட, கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 

Ad

 

இதில் ஆத்திரமடைந்த பாலுச்சாமி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரியம்மாள் துடிதுடித்ததைப் பார்த்துப் பயந்துபோன பாலுச்சாமி வேகவேகமாக வீட்டுக்கு வந்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை காவல்துறையினர் மாரியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற பாலுச்சாமியை மீட்ட போலீசார் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார்.