Did he blow up the car after seeing the police? Expedited investigation

Advertisment

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

தற்பொழுது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது யுஏபிஏ (உபா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவர் எனவும்கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தகோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 5 பேருக்கும் நவம்பர் எட்டாம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐந்து பேருமே 28 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் இதற்கு முன்பே என்ஐஏ விசாரணை வளையத்தில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக முபீனுக்கு கார் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட முகமது தல்கா1998 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நவாப் கான் என்பவரின் மகன் என்பதும் நவாப் கான் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பி எனவும்போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடந்த இச்சம்பவத்தின் போது கார் வெடித்த இடத்திற்கு 200 மீட்டர் தள்ளி காவல் துறையினர் இருந்துள்ளனர். காவல் அதிகாரிகள் அருகில் இருந்த பீட்டில் இருந்ததால் இந்த வாகனம் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்திருக்கக் கூடும் என்ற தகவலும் தெரிய வருகிறது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் முன் கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவையில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். சம்பவ தினத்தன்று ஜமேஷா முபின் ஓட்டிச் சென்றகாரை காவல்துறையினர் நிறுத்த முயன்றுள்ளனர் என்றும் காவல் துறையினரைப் பார்த்த பிறகு முபீன் காரை வெடிக்கச் செய்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கார் வெடித்த வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு தாங்களாகவே முன்வந்து விசாரிக்கத் துவங்கியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.